88 வயது முதியவரைத் தாக்கிய 80 வயது முதியவர்

88 வயது முதியவரைத் தாக்கிய 80 வயது முதியவர்

1 mins read
118fe31e-4e94-4340-ae24-de0e94e2e4d9
-

அங் மோ கியோ­வில் 88 வயது முதி­ய­வ­ரின் விரல்­க­ளி­லும் முகத்­தி­லும் வெட்­டிய 80 வயது நபர் நேற்று நீதிமன்­றத்­தில் நிறுத்­தப்­பட்­டார்.

வேண்­டு­மென்றே அபா­ய­க­ர­மான ஆயு­தத்­தால் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­ய­தாக டியோ வூ செங் மீது சனிக்­கி­ழமை குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

வரும் ஏப்­ரல் 6ஆம் தேதி வரை சாங்கி சிறை­யில் உள்ள மருத்­துவ வளா­கத்­தில் டியோவை தடுப்­புக் காவ­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அங்கு அவ­ரது உடல்­நி­லை பற்றி மதிப்­பி­டப்­படும்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை அங் மோ கியோ அவென்யூ 3ல் புளோக் 122ல் உள்ள ஷெங் சியோங் பேரங்­கா­டிக்கு வெளியே 88 வயது முதி­ய­வரை டியோ தாக்­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் பற்றி மாலை 5.56 மணிக்கு கேள்வி­யுற்ற காவல்­து­றை­யி­னர் அங்கு வந்து சம்­பவ இடத்­தி­லி­ருந்து கத்­தியை கைப்பற்றினர்.

முதி­ய­வ­ரின் இடது ஆள்­காட்டி விரல் மீதும் வலது கட்டை விரல் மீதும் வாய்ப் பகு­தி­யி­லும் டியோ கத்­தி­யால் தாக்கியதாக நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­ட­வரை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தது.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு இரண்டு நாள்­க­ளுக்கு முன்பு டியோ பற்றி பாதிக்­கப்­பட்­ட­வர் குறை கூறி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் கோப­ம­டைந்த டியோ 88 வயது முதி­ய­வ­ரைத் தாக்­கி­ய­தா­கச் சொல்­லப்­பட்­டது.