வர்த்தக ரீதியில் மின்சாரத்தைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகை மே 1ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்படும்.
ஒட்டுமொத்த சந்தையில் மின்சாரக் கட்டணம் ஏற்ற இறக்கமாக இருந்ததால் அந்தப் பாதிப்பை குறைப்பதற்காக நிலையான கட்டணத்தில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
தற்போது ஒட்டுமொத்தச் சந்தையில் நிலைமை மேம்பட்டுள்ளது. அதனால் தற்காலிக மின்சார ஒப்பந்த ஆதரவு திட்டம் நிறுத்தப்படுகிறது என்று எரிசக்தி சந்தை ஆணையம் நேற்று தெரிவித்தது.

