தஞ்சோங் பகார், கேப்பிட்டல் டவர் கட்டடத்தின் 40வது மாடியில் தொங்கு மேடையில் சிக்கிக் கொண்ட இரண்டு ஊழியர்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் சம்பவம் பற்றி தகவல் கிடைத்து அங்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விரைந்தது. அப்போது தொங்கு மேடையில் தவித்த இருவரையும் 'டார்ஃப்' எனும் பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் மீட்டு 52வது மாடியில் உள்ள பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு வந்தனர்.
பிற்பகல் 3.50 மணிவாக்கில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து காவல்துறையினர் தடுப்புகளைப் போட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட ஊழியர்களில் ஒருவர் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மருத்துவ உதவி யாளர்கள் முதலுதவியைச் செய்தனர். அவரது இடது கைக்கு கட்டுப் போடப்பட்டது. ஆனால் வெளியே தெரியும் அளவுக்கு அவருக்கு காயம் எதுவும் இல்லை. கடந்த செப்டம்ரில் இதே போன்று உயரமான இடத்தில் தொங்கு மேடையில் சிக்கிய ஓர் ஊழியரை 'டார்ஃப்' குழுவினர் காப்பாற்றினர்.
டெக் வை லேனில் நடந்த இந்தச் சம்பவத்தில் வீவக புளோக்கின் எட்டாவது, ஒன்பதாவது மாடிக்கு இடையே நாற்பது மணி நேரம் ஊழியர் சிக்கிக் கொண்டார்.

