உணவங்காடியில் மேசை ஒன்றில் 12 மணி நேரத்துக்கு மேல் படுத்துக்கிடந்தவர் இறந்து விட்டதாக அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படை அறி வித்தது. ஞாயிறு காலை 9.00 மணியளவில் அவர் படுத்து இருந்ததை துப்புரவு மேற்பார்வையாளர் லியு ஷென் குவாங் பார்த்தார். மாலை 8.00 மணிக்குப் பிறகும் அவர் எழுந்திருக்கவில்லை. லியு தரையைக் கழுவு வதற்காக அவரை எழுப்ப முயற்சி செய்தார். ஆனால் அவர் அசைவற்றுக் கிடந்ததால் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே அங்கு வந்த காவல்துறையினர் நான்கு மணி நேரம் இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். இரவு 11.00 மணியளவில் இறந்தவரின் உடல் அகற்றப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் சூது இருக்காது என காவல்துறை நம்புகிறது.

