'தகவல்கள் ஏதும் மறைக்கப்படவில்லை'

'தகவல்கள் ஏதும் மறைக்கப்படவில்லை'

2 mins read
8d2be5ae-8895-4f73-ae3b-99f34f573f0b
-
multi-img1 of 2

கொவிட்-19 வெள்ளை அறிக்கை குறித்துத் துணைப் பிரதமர் வோங்

அர­சாங்­கம் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கையாண்ட விதம் தொடர்­பான வெள்ளை அறிக்­கை­யில் முழு­மை­யான தக­வல்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று கூறு­வது தேவை­யற்ற வாதம் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கூறி­யி­ருக்­கி­றார்.

அசல் அறிக்­கையை வெளி­யி­டும்­படி எதிர்த்­த­ரப்­புத் தலை­வர் பிரித்­தம் சிங் கேட்­டுக்­கொண்­ட­தற்கு அவர் மறுப்­புத் தெரி­வித்­தார்.

முன்­னாள் பொதுச் சேவைப் பிரி­வுத் தலை­வர் பீட்­டர் ஹோ தலை­மை­யில் நடத்­தப்­பட்ட மறு­ஆய்­வின் அறிக்­கையை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்க வேண்­டும் என்று திரு சிங் நேற்று முன்­தி­னம் கோரிக்கை எழுப்­பி­னார்.

அதில் இருந்து சில தக­வல்­கள் நீக்­கப்­பட்ட பிறகே வெள்ளை அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்­றார் அவர்.

"அர­சாங்­கம் கிரு­மிப் பர­வ­லைக் கையாண்ட விதத்­தில் சில குறை­பா­டு­கள் இருப்­பதை வெள்ளை அறிக்கை ஒப்­புக்­கொள்­கிறது.

"இருப்­பி­னும் அசல் அறிக்­கை­யில் இருந்து எந்­தெந்­தத் தக­வல்­கள் அகற்­றப்­பட்­டன என்று சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குத் தெரி­யாது. தேசி­யப் பாது­காப்­பைப் பாதிக்­கக்­கூ­டிய தக­வல்­கள் என்­றால் அவை அகற்­றப்­ப­ட­லாம்," என்று திரு சிங் கூறி­னார்.

நேற்று அவ­ருக்­குப் பதி­ல­ளித்த துணைப் பிர­த­மர், "நெருக்­கடி ஏற்­ப­டும்­போது, அர­சி­யல், வகிக்­கும் பதவி இவற்­றுக்கு அப்­பாற்­பட்டு ஒற்­று­மை­யு­டன் செயல்­பட வேண்­டும் என்று திரு சிங் முன்னர் கூறி­யி­ருக்­கி­றார். ஆனால் இப்­போது இவ்­வாறு அவர் கூறு­வது ஏன் என்று புரி­ய­வில்லை.

"கிரு­மிப் பர­வ­லைக் கையாண்ட விதம் குறித்து மறு­ஆய்வு செய்­யும் பொறுப்­பை அர­சாங்­கம் திரு ஹோவி­டம் ஒப்­ப­டைத்­தது. தொடக்­கத்­தில் இருந்து ஆகஸ்ட் 2021 வரை இருந்த நிலை­மையை ஆய்வு செய்­யும்­படி அவர் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார்.

"ஏனெ­னில் கிரு­மிப் பர­வல் எப்­போது முடி­வுக்கு வரும் என்று அப்­போது உறு­தி­யா­கத் தெரி­யாது. அதே­நே­ரத்­தில் பல்­வேறு அர­சாங்க அமைப்­பு­களும் அவற்­றின் கொள்கை, செய­லாக்க முடி­வு­கள் ஆகி­யவை குறித்த மறு­ஆய்­வைத் தொடங்­கின," என்று துணைப் பிரதமர் கூறினார்.

"எனவே திரு ஹோவின் இடைக்­கால அறிக்­கை­யோடு இந்த அமைப்­பு­க­ளின் அறிக்­கை­களில் இடம்­பெற்ற தக­வல்­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து, ஆக அண்­மை­யில் நாடு கற்­றுக்­கொண்ட பாடங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அறிக்­கை­யைத் தொகுக்க நேரிட்­டது," என்­றார் திரு வோங்.

"பிர­த­மர் அலு­வ­ல­கம் இவ்­வாறு தொகுக்­கும் பொறுப்பை ஏற்­றது. பின்­னர் இதை வெள்ளை அறிக்­கை­யாக வெளி­யிட முடி­வெ­டுக்­கப்­பட்­டது," என்­றார் அவர்.

"தொகுக்­கப்­பட்ட இந்த அறிக்கை, அர­சாங்­கத்­தின் செயல்­பாட்­டைத் துல்­லி­ய­மாக எடுத்­து­ரைக்­கிறது.

"திரு ஹோவின் அறிக்­கை­யைக் காட்­டி­லும் இது விரி­வாக இருக்­கிறது," என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

"திரு ஹோவின் அறிக்­கை­யில் உள்ள விவ­ரங்­க­ளை­யும் அமைச்சுகளின் அறிக்கைகளையும் அனைவரும் தெரிந்­து­கொள்­வது முக்­கி­யம் என்­பது என் கருத்து.

"இருப்பினும் இந்­தக் கருத்து வேற்­று­மைக்­கும் தீர்­மா­னத்­திற்கு பாட்­டா­ளிக் கட்சி வழங்­கும் ஆத­ர­விற்­கும் தொடர்பு இல்லை," என்று திரு சிங் கூறி­னார்.