'2020 பிப்ரவரி மாதத்தில் சிங்கப்பூரில் முகக்கவசத் தயாரிப்பு தொடங்கிவிட்டது'

'2020 பிப்ரவரி மாதத்தில் சிங்கப்பூரில் முகக்கவசத் தயாரிப்பு தொடங்கிவிட்டது'

3 mins read
e50ba495-7dbd-4a6f-938f-b7adad540e5b
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு முன்­னர் சிங்­கப்­பூ­ரில் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு வெளியே முகக்­க­வ­சம் அணி­வது மிக­வும் அரி­தா­கவே இருந்­தது.

அத­னால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யி­ன­ரின் தேவையை ஈடு­கட்­டும் அள­வில் மட்­டுமே நாட்­டின் தேசி­யக் கையி­ருப்­பில் முகக்­க­வ­சங்­கள் இருந்­தன.

இங்­குள்ள நிறு­வ­னங்­களும் குறை­வான செல­வில் வெளி நாடு­களில் முகக்­க­வ­சத் தயா­ரிப்­புத் தொழிற்­சா­லை­களை நடத்தி வந்­தன என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­யுள்­ளார்.

பொது­வெ­ளி­யில் முகக்­க­வ­சம் அணி­தல் கட்­டா­ய­மாக்­கப்­பட்­ட­போது, அர­சாங்­கம் உட­ன­டி­யா­கப் பங்­கா­ளித்­துவ அமைப்­பு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றி வெளி­நா­டு­களில் இருந்து முகக்­க­வ­சங்­க­ளைத் தரு­வித்­தது.

அறுவை சிகிச்­சைத் தரத்­தி­லான முகக்­க­வ­சங்­க­ளைத் தயா­ரிக்­கும் தொழிற்­சா­லை­கள் சிங்­கப்­பூ­ரில் அமைக்­கப்­பட்­டன. 2020ஆம் ஆண்டு பிப்­ர­வரி அவற்­றில் உரு­வாக்­கப்­பட்ட முதல் தொகுதி முகக்­க­வ­சங்­கள் பயன்­பாட்­டுக்­குத் தயா­ராக இருந்­தன என்­றார் அமைச்­சர் கான். உள்­ளூர் நிறு­வ­னங்­கள் தாமா­கவே முன்­வந்து மறு­ப­ய­னீடு செய்­யக்­கூ­டிய முகக்­க­வ­சங்­க­ளைத் தயா­ரிக்­கத் தொடங்­கி­யதை அவர் சுட்­டிக் காட்டி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின் தொடக்­கத்­தில் சிங்­கப்­பூ­ரி­லேயே முகக்­க­வ­சம் தயா­ரிப்­ப­தற்கு உரிய வச­தி­கள் ஏன் இல்லை என்று அல்­ஜு­னிட் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜெரல்ட் கியாம் எழுப்­பிய கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

உணவு, இதர அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விநி­யோ­கம் தடை­ப­டா­மல் இருப்­பதை உறு­தி­செய்ய அர­சாங்­கம் கப்­பல் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளைச் சேமித்து வைக்­கும் கிடங்­கு­க­ளின் பரப்­ப­ளவு அதி­க­ரிக்­கப்­பட்­டது என்­றார் அவர்.

பாது­காப்பு நிர்­வாக நடை­முறை­கள் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­னா­லும் பல்­வேறு நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்க மய­மா­த­லைக் கடைப்­பி­டிக்­கத் தொடங்­கி­யதை அமைச்­சர் சுட்­டி­னார். குடி­யி­ருப்பு வட்­டா­ரக் கடை­களில் கிட்­டத்­தட்ட 93 விழுக்­காட்­டுக் கடை­கள் மின்­னி­லக்க நடை­மு­றைக்கு மாறின என்­றார் அவர்.

கிரு­மிப் பர­வ­லின் தொடக்­கத்­தில் அர­சாங்­கம் முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை என்று ஆலோ­சனை கூறி­யது. சிங்­கப்­பூ­ரில் போதிய எண்­ணிக்­கை­யில் முகக்­க­வ­சம் இல்­லா­த­து­தான் இதற்கு உண்­மை­யான கார­ண­மாக இருக்­கக்­கூடும் என்று திரு கியாம் மன்­றத்­தில் கருத்­து­ரைத்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், உல­கச் சுகா­தார நிறு­வ­னத்­தின் பரிந்­து­ரை­க­ளுக்கு ஏற்­பவே முத­லில் அவ்­வாறு ஆலோ­சனை கூறப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார். முகக்­க­வ­சப் பற்­றாக்­குறை ஏற்­ப­டக்­கூ­டும் என்ற கவலை அதற்­குக் கார­ண­மல்ல என்­றார் அவர்.

நன்றாக இருப்போரும் முகக்கவசம் அணியும்படி இங்குள்ள மருத்துவர்கள் நால்வர் முன்னரே வலியுறுத்தியதை திரு கியாம் சுட்டினார்.

"ஆனால், 2020ஆம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதி வரை உல­கச் சுகா­தார நிறு­வ­னம் முகக்­க­வ­சத்­தால் பாது­காப்பு இல்லை என்றே கூறி­வந்­தது. கிரு­மித்­தொற்று எவ்­வாறு பர­வு­கிறது என்று தொடக்­கத்­தில் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை. ஆதா­ர­பூர்­வ­மாக அது தெரி­ய­வந்­த­தும் சிங்­கப்­பூர் அதன் நிலைப்­பாட்டை மறு ஆய்வு செய்து அதற்­கேற்ப பொது­மக்­க­ளுக்கு ஆலோ­சனை விடுத்­தது," என்­றார் அமைச்­சர் ஓங்.

முத­லில் முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை என்று கூறிய அர­சாங்­கம் பின்­னர் அதற்கு மாறாக அணி­யும்­படி வலி­யு­றுத்­தி­யது. இம்­மா­தம் 8ஆம் தேதி வெளி­யான கிரு­மிப்­ப­ர­வலை அர­சாங்­கம் கையாண்ட விதம் குறித்த வெள்ளை அறிக்­கை­யில், இது அர­சாங்­கம் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கையாண்ட விதம் குறித்த பொது­மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பாதித்­த­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.