மரபை விட்டுக்கொடுக்காமல் கட்டிக்காக்கும் நால்வருக்கு அங்கீகாரம், விருதுகள்

மரபை விட்டுக்கொடுக்காமல் கட்டிக்காக்கும் நால்வருக்கு அங்கீகாரம், விருதுகள்

2 mins read
befd52e3-4418-4f9e-9732-dfcdfc0a3015
-

ரச்­சனா வேலா­யு­தம்

சிங்­கப்­பூ­ரில் உள்ள கலா­சார பாரம்­ப­ரி­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் பாது­காப்­ப­தற்­கும் தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் முயற்­சி­க­ளில் ஒன்­றான தொட்­டு­ணர முடி­யாத கலா­சார மர­பு­டைமை (ஐசி­எச்) அங்­கீ­கா­ர விருது நேற்று சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­டத்­தில் நான்கு தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்­கப்­பட்­டது. இந்த ஐசி­எச் மேற்­பார்­வை­யா­ளர் விருது 2019ல் தொடங்கி நேற்று மூன்­றா­வது ஆண்­டாக நடைபெற்றது. கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­ச­ரும் இரண்­டாம் சட்ட அமைச்­ச­ரு­மான திரு எட்­வின் டோங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­துக்­கொண்­டார்.

இந்த விழா­வில் அங்­கீ­கா­ரம் கிடைத்­த­வர்­க­ளின் குடும்­பத்­

தி­னர், நண்­பர்­கள், அமைப்பு உறுப்­பி­னர்­கள் உட்­பட கிட்­ட­தட்ட 100 பேர் கலந்­துக்­கொண்­ட­னர். மரபை விட்­டுக்­கொ­டுக்­கா­மல் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் இந்­தக் கலை­களை செய்­து­வ­ரும் இவர்­க­ளின் அனு­ப­வங்­கள் காணொளி மூல­மாக வந்­த­வர்­க­ளி­டம் காட்­டப்­பட்­டது.

ஆர்க்­கிட் செடி­க­ளைப் பாது­காத்து வளர்த்து வரும் திரு சயீத் யூசோஃப் அல்­ச­கோஃப், சிங்­கப்­பூர் வூஷு, கடல்­நாக, சிங்க நட­னச் சம்­மே­ள­னம், வாயாங் பிர­னாக்­கான், குனோங் சாயாங் அமைப்பு ஆகி­யோர் இந்த அங்­கீ­கா­ரத்தை பெற்­றுள்­ள­னர்.

இதில், கர­கம் கட்­டும் கலை­யில் மிகுந்த ஆர்­வம் கொண்டு இக்­க­லையை அடுத்த தலை­மு­றைக்­குக் கொண்டு செல்­லும் முயற்­சி­களில் ஈடு­பட்ட திரு பால­கி­ருஷ்­ணன் வீரா­சாமி ராம­சா­மிக்­கும் இந்த அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டது.

"தேசிய அள­வில் கர­கம் கட்­டும் கலைக்கு இந்த விருது கிடைத்­த­தில் எனக்கு பெருமை. நான் முதன் முத­லில் கர­கத்தை அலங்­க­ரிக்க தொடங்­கி­ய­போது, எனக்­குள் இருந்த ஆர்­வம் என்னை மேம்­ப­டுத்­திக்­கொள்ள தூண்­டி­யது. அதேபோல, அடுத்த தலை­மு­றை­யை­யும் ஊக்­கு­வித்து அவர்­கள் சிறப்­பாக இந்­தக் கலை­யைக் கற்க நான் வழி வகுத்­துள்­ளேன் என்று நம்­பு­கி­றேன்.

"அடுத்த தலை­மு­றைக்கு ஒரு கலையை அவர்­க­ளுக்கு புரி­யும் வழி­யில் எடுத்­துச் செல்­வது நம் பொறுப்பு.

"இந்­தக் கலை மீதான அதீத நாட்­டத்தை சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து வளர்க்க வேண்­டும்," என்று திரு பால­கி­ருஷ்­ணன் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

"பல்­லின சமு­தா­யத்­தில் கலா­சா­ரத்தை மதித்து, காலத்­திற்கு ஏற்ப இக்­க­லை­களை மற்­ற­வர்­

க­ளுக்குக் கொண்டு செல்ல வேண்­டும்.

"இக்கலை­க­ளின் நுணுக்­கங்­க­ளை­யும் அழ­கை­யும் பல தலை­மு­றை­க­ளுக்­குக் கொண்டு செல்ல 'அவர் எஸ்ஜி ஹெரி­டேஜ் 2.0' எனும் திட்­டத்­தின்கீழ் சிங்­கப்­பூர் தொடர்ந்து பல முயற்­சி­களில் ஈடு­படும். பல்­லின கல­சா­ரத்தைப் புதிய முறை­களில் அடுத்த தலை­மு­றைக்கு எடுத்து செல்­வோ­ருக்கு இந்த விருது வழங்­கப்

­ப­டு­கிறது." என்று அமைச்­சர் எட்­வின் டோங் தன் உரை­யில்

கூறி­னார்.