வழக்கறிஞர் எம். ரவி ஐந்தாண்டு இடைநீக்கம்

வழக்கறிஞர் எம். ரவி ஐந்தாண்டு இடைநீக்கம்

1 mins read
c332e8e8-9b24-4c16-9600-9cc82041d0b0
-

சிங்­கப்­பூ­ரின் நீதித்­து­றைக்கு எதி­ராக எவ்­வித ஆதா­ர­மும் இன்றி மிகக் கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்த கார­ணத்­துக்­காக வழக்­க­றி­ஞர் எம். ரவி (படம்) ஐந்து ஆண்­டு ­க­ளுக்கு இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

தலை­மைச் சட்ட அதி­காரி, வழக்­க­றி­ஞர் சங்­கத்­துக்கு எதி­ராக அவர் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார். இது சிங்­கப்­பூ­ரின் நீதித்­து­றை­யின் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் விளை­விக்­கும் வகை­யில் அமைந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தமது கட்­சிக்­கா­ர­ருக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை 2020ஆம் ஆண்­டில் மேல்­மு­றை­யீடு நிதி­மன்­றம் தள்­ளு­படி செய்த பிறகு தி ஆன்­லைன் சிட்­டி­சன் எனும் சமூக அர­சி­யல் இணை­யத்­த­ளத்­துக்கு அளித்த பேட்­டி­யில் திரு ரவி சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­க­ளைத் தெரி­வித்­தார்.

அத்­து­டன் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அவர் பதி­விட்ட கருத்­து­களும் சர்ச்­சைக்­கு­ரி­ய­வை­யாக இருந்­தன.

அவர் மீது நான்கு ஒழுங்­கின்மை குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. அவற்­றில் மூன்­றில் அவர் குற்­றம் புரிந்­தது நிரு­பிக்­கப்­பட்­டது.

அவ­ருக்கு $6,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. ஆனால் அவ­ருக்கு மேலும் கடு­மை­யான தண்­டனை விதிக்க வேண்­டும் என்று வழக்­க­றி­ஞர் சங்­கம் கோரிக்கை விடுத்­தது.

திரு ரவி­யின் கருத்­து­கள் சிங்­கப்­பூ­ரின் நீதித்­துறை மீது சந்­தே­கம் வர வைக்­கும் அள­வுக்கு இருப்­ப­தாக நீதி­மன்­றம் நேற்று தெரி­வித்­தது.

"சிங்­கப்­பூ­ரின் நீதித்­துறை மீது திரு ரவிக்கு அடிப்­படை மரி­யா­தை­கூட இல்லை என்­பதை அவ­ரது தவ­றான நடத்தை தெள்­ளத் தெளி­வா­கக் காட்­டு­கிறது," என்று தீர்ப்­ப­ளித்த தலைமை நீதி­பதி சுந்­தரேஷ் மேனன் கூறி­னார்.