ஆசிய பசிபிக் வட்டாரத்தில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு தற்போது முக்கிய காலகட்டமாக இருப்பதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஹான் கோக் ஜுவான் நேற்று தெரிவித்தார். கொவிட்-19 நெருக்கடி
நிலைக்குப் பிறகு ஆசிய பசிபிக் நாடுகளில் விமானப் போக்கு
வரத்து மீண்டும் முழுவீச்சுடன் இயங்க இருப்பதால் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விமானப் பயணங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக அதைச் சமாளிக்க முடியாமல் பல விமான நிலையங்கள், விமானச் சேவைகள் சிரமப்படுவதாக திரு ஹான் கூறினார். கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டி லிருந்து 100 விழுக்காட்டு வரையிலான விமானப் போக்கு
வரத்தை ஆசிய நாடுகள் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் முன்பு இருந்த நிலைக்கு ஆசிய நாடு
களின் விமானப் போக்குவரத்து முழுமையாகத் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். எனவே, வருங்காலங்களில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள ஆசிய பசிபிக் நாடுகள் ஒன்றிணைவது மிகவும் முக்கியம் என்றும் பிறருக்கு ஏற்பட்ட அனுபவங்களி
லிருந்து கற்றுக்கொண்டு அதே மாதிரியான சம்பவங்கள் நிகழாதிருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திரு ஹான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்முறையாக நடத்தப்படும் ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்து உச்சநிலை மாநாடு இன்று முதல் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

