தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக புளோக் 9வது தள சன்னலிலிருந்து வெளியேறிய ஆடவர் மீட்பு

1 mins read
68eefc02-479d-44f5-b631-705ca7c06638
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) புளோக் ஒன்­றின் ஒன்­பதாம் தளத்­தில் இருக்­கும் வீட்­டி­லி­ருந்து சன்­னல்­வ­ழி­யா­கக் குதிக்க முயன்ற ஆட­வர் மீட்­கப்­பட்­டார். போதைப்­பொ­ரு­ளைக் கடத்தி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் அவரை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வு அதி­கா­ரி­கள் மீட்­ட­னர்.

கைதா­கா­மல் இருக்­கத் தப்­பி­யோட முயன்­ற­போது ஆட­வர் மீட்­கப்­பட்­டார்.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று பிடோக் நார்த் வட்­டா­ரத்­தின் வெவ்­வேறு இடங்­களில் போதைப்­பொ­ருள் தடுப்­புச் சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அவற்­றில் ஒரு சோதனை மேற்­கொள்­ளப்­பட்­ட­போது இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. இச்­சோ­த­னை­யில் 23லிருந்து 30 வய­துக்கு உட்­பட்ட மூன்று ஆட­வர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர். 28 வயது பெண்­ ஒருவரும் கைதா­னார்.

கைதானோரில் ஓர் 25 வயது ஆட­வர் ஒருவர் வீவக வீட்­டு சன்­ன­ல் வழியாக வெளி­யே­றி­யிருக்­கி­றார். அப்­போது அவர் கால் தவறி விழவிருந்தார். பல அதி­கா­ரி­கள் ஒன்­று­சேர்ந்து சந்­தேக நப­ரைப் பாது­காப்­பாக மீட்­ட­னர். அதற்­குப் பிறகு அவர் கைதா­னார்.

ஆட­வர் போதைப்­பொ­ருள் கடத்­த­லில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அவரை விழா­மல் தடுக்க முயன்­ற­போது போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­காரி ஒரு­வ­ரி­ன் வலது கையில் ஆழ­மான வெட்­டுக்­காயங்­கள் ஏற்­பட்­டன.

அவர் மருத்து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.