பொதுமக்களைக் கட்டிப்பிடிக்க முயன்றதாகப் பெண்மீது சந்தேகம்

பொதுமக்களைக் கட்டிப்பிடிக்க முயன்றதாகப் பெண்மீது சந்தேகம்

1 mins read
3dce4c28-140d-4c51-a7c0-9576eeea7b92
-

இறு­திச் சடங்கு நடை­பெ­றும் பகு­திக்கு அருகே அல­றி­ய­து­டன் உண­வுக் கடைத்­தொ­கு­தி­யில் பொது­மக்­க­ளைக் கட்­டிப்­பி­டிக்க முயன்­றது உள்­ளிட்ட செயல்­களைப் புரிந்­த­தாக ஒரு பெண் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றார்.

46 வயது கோ மெய் சி எனும் அப்­பெண்­மீது பொது­மக்­க­ளுக்­குத் தொந்­த­ர­வாக இருந்­த­தன் தொடர்­பில் இரு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. அள­வுக்கு அதி­க­மாக மது­பானம் அருந்­தி­விட்டு பொது இடத்­தில் தவ­றாக நடந்­து­கொண்­டது, கவ­ன­மின்றி நடந்­து­கொண்­ட­தால் பிறருக்குக் காயம் ஏற்­படுத்­தி­யது ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் அவர்­மீது மேலும் இரண்டு குற்­றச்­சாட்­டு­களும் சுமத்­தப்­பட்­டன.

பைய­னி­யர் கடைத்­தொ­குதி, கெக் போ கடைத்­தொ­குதி, பூன் லே டிரைவ் ஆகிய இடங்­களில் சென்ற ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்­களில் கோ மெய் சி குற்றங்­க­ளைப் புரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.