முதியவர் மீது மோதிய பிறகு வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடிய மசராட்டி ஓட்டுநருக்குச் சிறை, அபராதம்

முதியவர் மீது மோதிய பிறகு வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடிய மசராட்டி ஓட்டுநருக்குச் சிறை, அபராதம்

2 mins read
43ef1241-d8fc-45d3-ac1c-b8690726d350
-

முதி­ய­வர் மீது மோதிய பிறகு வானத்தை நிறுத்­தா­ம­லும் அவ­ருக்கு எந்­த­வித உத­வி­ செய்­யா­ம­லும் தப்­பி­யோ­டிய மச­ராட்டி ஓட்­டு­ந­ருக்கு நேற்று சிறை, அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

விபத்­தில் 85 வயது ஃபூ கோக் காம் என்­ப­வ­ருக்கு பல எலும்பு முறிவு காயங்­கள் ஏற்­பட்­டன.

2020ஆம் ஆண்­டில் நிகழ்ந்த விபத்­தில் கவ­னக்­கு­றை­வாக வாக­னத்தை ஓட்­டிய வோங் கிம் புன்­னுக்கு, 52, நேற்று 16 வாரச் சிறைத் தண்­ட­னை­யும் 800 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து ஐந்து ஆண்­டு­கா­லத்­திற்கு அனைத்­து­வி­த­மான வாக­னங்­கள் ஓட்­ட­வும் அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

'ஃபிரேகி­ரண்ட் ஃபுளோரிஸ்ட்' உள்­ளிட்ட வர்த்­த­கங்­களை சொந்­த­மாக நடத்தி வந்த வோங் கடந்த பிப்­ர­வ­ரி­யில் குற்­றத்தை ஒப்­புக்கொண்­டார்.

2019ல் மற்­றொரு விபத்­தி­லும் அவர் சிக்­கி­யி­ருந்­தார். அப்­போது ஒஃ­பிர் சாலை, விக்­டோ­ரியா சாலை சந்­திப்­பில் அவர் காரை ஓட்­டிச் சென்­ற­போது சைக்­கி­ளோட்டி மீது மோதி­னார்.

அண்­மை­யில் 2020 ஜூலை 9ல் நிகழ்ந்த விபத்­தில் இரவு 11.00 மணி­ய­ள­வில் அப்­பர் ஈஸ்ட் கோஸ்ட் சாலையை நோக்கி ஈஸ்ட் கோஸ்ட் சாலை­யில் சென்­ற­போது கவ­னக்­கு­றை­வால் அவ­ரது மச­ராட்­டிக் கார் வய­தான திரு ஃபூ மீது மோதி­யது.

சாலை­யைத் தள்­ளாடி தள்­ளாடி கடந்து கொண்­டி­ருந்த திரு ஃபூ தூக்கி எறி­யப்­பட்­டார்.

விபத்­துக்­குப் பிறகு வோங் தனது காரை மெது­வாக நிறுத்­தி­னா­லும் பின்­னர் முதி­ய­வ­ருக்கு உதவி செய்­யா­மல் சென்­று­விட்­டார்.

சம்­ப­வத்தை நேரில் பார்த்த சிலர் காவல்­து­றைக்­குத் தக­வல் கொடுத்­தைத் தொடர்ந்து அந்­தப் பகு­தி­யில் கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வான காட்­சி­களை வைத்து திரு வோங் அடை­யா­ளம் காணப்­பட்­டார்.

விசா­ர­ணை­யில் திரு ஃபூவின் உடை­யில் இருந்த சில அடை­யா­ளங்­கள் திரு வோங்­கின் கார் மூலம் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்­பது உறு­தி­யா­னது.

விபத்­தில் திரு ஃபூவுக்கு இடுப்­புப் பகு­தி­யி­லும் முது­குத் தண்­டி­லும் காயம் ஏற்­பட்­டது. ஏறக்­கு­றைய 43 நாள்­கள் மருத்­து­வ­மனை விடுப்பு அளிக்­கப்­பட்ட அவர், இரண்டு மாதங்­க­ளுக்கு மேல் சக்­கர நாற்­கா­லி­யைப் பயன்­ப­டுத்­தி­னார்.