சிங்கப்பூர் காப்புறுதித் துறை, உள்நாட்டு, வெளிநாடு என இரு பிரிவுகளிலும் சென்ற ஆண்டு 15% வளர்ச்சி கண்டுள்ளது.
இதில் முக்கிய பங்கு வகிப்பது சுகாதாரப் பிரிவு காப்புறுதித் திட்டங்கள்.
இதைத் நேற்று தெரிவித்த 'த ஜெனரல் இன்ஷுரன்ஸ் அசோசியேஷன் ஆஃப் சிங்கப்பூர்' என்ற சிங்கப்பூர் காப்புறுதிச் சங்கம், பொதுப் பிரிவு காப்புறுதித் திட்டங்கள், உறுதி செய்யப்பட்ட சந்தா தொகை அடிப்படையில், $96.4 பில்லியன் அளவு வளர்ச்சி கண்டதாகக் கூறியது. இதில் உள்நாட்டில் உறுதி செய்யப்பட்ட சந்தா தொகை அடிப்படையில் காப்புறுதி துறை 9.6% வளர்ச்சி கண்டு $4.84 பில்லியன் அளவுக்கு வளர்ச்சி கண்டதாக சங்கம் கூறியது. இந்த வளர்ச்சி கொவிட்-19 கொள்ளைநோய்க்கு பிந்திய காலகட்டத்தில் சுகாதாரம், பயணத்துறை, சொத்துச் சந்தை போன்ற துறைகளில் காப்புறுதித் திட்டங்களை வாங்கும் போக்கு அதி கரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டது.

