பிபி சிங்கப்பூர் (BP Singapore) முன்னாள் நிர்வாகிக்கும் அவருக்கு $5.88 மில்லியன் லஞ்சம் கொடுத்த வர்த்தகருக்கும் தலா நான்கரை ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள், எட்டு மாதங்களுக்கு சிறைத்தண்டனையை உயர்த்தி உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கிளேரன்ஸ் சாங் பெங் ஹோங்குக்கு, 57, லஞ்சம் வாங்கிய தொகைக்கு ஈடாக அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. பசிபிக் பிரைம் டிரேடிங்(பிபிடி) எனும் கடற்துறை எரிபொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கோ செங் லீ, 60, என்பவரிடமிருந்து பிபி சிங்கப்பூர் கடற்துறை எரிபொருள் பிரிவின் முன்னாள் பொறுப்பாளரான சாங், 2006 முதல் 2010 வரை 19 சந்தர்ப்பங்களில் 3.95 மில்லியன் யுஎஸ் டாலரை லஞ்சமாகப் பெற்றுள்ளார். சாங் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவின் நிறுவனமான பிபிடிக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் பல வர்த்தக வாய்ப்புகளை வழங்கியதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

