நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று இடைக் காலமாக ஒத்தி வைக்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தொடர் புதிய நிகழ்ச்சி நிரலுடன் ஏப்ரல் 10ஆம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10ஆம் தேதியன்று அதிபர் ஹலிமா யாக்கோப் புதிய கூட்டத் தொடரை தொடங்கி வைக்கவிருக்கிறார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அப்போது, தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் முன்னுரிமைகள், கொள்கைகள், திட்டங்களை அதிபர் ஹலிமா யாக்கோப் பட்டியலிட்டு உரையாற்றுவார்.
இவ்வாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் திருமதி ஹலிமா, அடுத்த தவணைக்குப் போட்டியிடவில்லையென்றால் இது அவரது கடைசி மற்றும் 3வது உரையாக இருக்கும்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இந்த இரண்டு வார இடைவெளி அரசாங்க பதவிக் காலத்தின் நடுப்பகுதியைக் குறிக்கிறது.
இந்த இடைவெளி, இதுவரை அடைந்த அரசாங்கத்தின் இலக்குகள், அறிவிக்கப்போகும் திட்டங்கள், கொள்கைகளை வகுக்க வழி வகுக்கிறது.
அரசாங்கத்தின் புதிய கொள்கைகள், திட்டங்களை அதிபர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிடுவார்.
அடுத்த பொதுத்தேர்தல் 2025ஆம் ஆண்டில் நடைபெற விருக்கிறது.

