ஃபேஸ்புக் பதிவில் சில பகுதிகளை மட்டும் அகற்றிய தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய்

ஃபேஸ்புக் பதிவில் சில பகுதிகளை மட்டும் அகற்றிய தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய்

2 mins read
8748754e-b5e6-47f5-82a3-db85ddaed826
-

தன்னைக் களங்­கப்­ப­டுத்­தும் ஃபேஸ்புக் பதி­வு­களை முழு­மை­யாக அகற்ற வேண்­டும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் வலி­யு­றுத்­திய நிலை­யில் ஒரு சில பகு­தி­களை மட்­டும் தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான லியோங் மன் வாய் அகற்­றி­யி­ருக்­கி­றார்.

லியோங் மன் வாயின் பதி­வில் பல தவ­றான தக­வல்­கள் இடம்­பெற்று இருப்­ப­தாக அமைச்­சர் சண்­மு­கம் சுட்டிக் காட்டியிருந் தார்.

திரு லீ சியன் யாங்-திரு­மதி லீ சுவெட் ஃபெர்ன் வழக்கு விவ­கா­ரத்­தில் இல்­லப்­ப­ணிப்­பெண் பார்ட்டி லியா­னி­யின் வழக்கை முன்­ன­தாக நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்­சர் சண்­மு­கம் குறிப்­பிட்டு பேசி­யது 'நீரில் சேற்றைக் கலக்கும்' முயற்சி என்ற பகு­தியை மட்­டும் தமது ஃபேஸ்புக் பதி­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான லியோங் அகற்­றி­யி­ருந்­தார்.

காவல்­து­றை­யின் விசா­ர­ணை­யில் ஒத்­து­ழைப்­ப­தா­கக் கூறிய தம்­ப­தி பின்னர் சிங்­கப்­பூ­ரி­ல் இ­ருந்து காணா­மல் போயி­விட்­ட­னர் என்று அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹிய­னும் சட்ட, உள்துறை அமைச்சர் சண்­மு­க­மும் குற்­ற­வி­யல் வழக்­கு­களில் தங்­க­ளு­டைய கருத்­து­களை மக்­க­ளி­டம் திணிக்க நாடாளுமன்­றத்தை ஒரு தள­மா­கப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர் என்ற பத்தியையும் தம்­பதி சிங்­கப்­பூ­ரில் காணா­மல்­போ­ன­தற்­காக அவர்­கள் ஓடி­விட்­ட­தாக திரு சண்­முகம் கரு­து­கி­றார் என்ற பத்தியை யும் லியோங் நீக்­கி­யி­ருந்­தார்.

தனது பல அறிக்­கை­களை மீட்­டுக்கொள்­ள­வும் ஃபேஸ்புக் பதி­வு­களை அழிக்­க­வும் நாடா­ளு­மன்ற மர­பு­க­ளுக்கு மாறாக, ஏற்றுக்கொள்ள முடி­யாத நடத்­தைக்­காக அமைச்­சர் சண்­மு­கத்­தி­டம் மன்­னிப்­புக் கேட்­க­வும் முன்பு மறுத்த லியோங் ஃபேஸ்புக் பதி­வில் மாற்­றங்க­ளைச் செய் திருந்தார்.

திரு லியோங் வியா­ழக்­ கிழமை வெளி­யிட்ட மற்­றொரு பதி­வில் திரு, திரு­மதி லீ வழக்­கு பற்றி சட்ட அமைச்­சர் பதி­ல­ளித்த பிறகு தனது மன­தில் தோன்­றிய கேள்­வி­களை கேட்க விரும்­பி­ய­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

அமைச்­ச­ருக்கு களங்­கம் விளை­விக்க வேண்­டும் என்­பதோ, நாடா­ளு­மன்ற நடை­முறை­க­ளுக்கு மாறாக நடந்­து­கொள்­வதோ தமது நோக்­க­மல்ல என்று வலி­யு­றுத்­திய லியோங், பொது ­ந­ல­னைக் கருத்­தில்கொண்டே கேள்­வி­களை எழுப்­பி­ய­தா­கக் கூறி­னார்.

"புதன்­கி­ழமை நாடா­ளு­மன்ற கூட்­டத்­திற்­குப் பிறகு திங்­கள் கிழமை ஃபேஸ்புக்­கில் பதி­விட்ட கருத்­து­களை மீட்­டுக்­கொள்ள முடிவு செய்­தேன். இது, இதன் தொடர்­பான அக்­க­றை­களைப் போக்­கும்," என்று அவர் தெரி வித்தார்.

அமைச்­சர் கேட்­டுக்­கொண்­ட­தைப்போல தனது ஃபேஸ்புக் பதிவை முழு­மை­யாக அகற்­று­வது ஏற்­பு­டை­யது அல்ல என்­று லியோங் கூறினார்.