இன்றைய கவிமாலையில் கவிஞர் மண்குதிரை

இன்றைய கவிமாலையில் கவிஞர் மண்குதிரை

1 mins read
1901c837-e133-40bb-a3eb-07175351c35b
-

கவி­மாலை அமைப்பு ஒவ்­வொரு மாத­மும் கடைசி சனிக்­கி­ழ­மை­யில் மாதாந்­த­ரச் சந்­திப்­பினை நடத்தி வரு­கிறது.

அந்­த­ வ­கை­யில் கவி­மா­லை­யின் 274வது சந்­திப்பு இன்று மாலை 6 மணிக்கு தேசிய நூல­கம், தளம் 5, 'பாசி­பி­லிட்டி' அறை­யில் நடை­பெற இருக்­கிறது.

இம்­மா­தச் சந்­திப்­பில் ஜெய­கு­மார் எனும் இயற்­பெ­ய­ரைக் கொண்ட கவி­ஞர் மண்­கு­திரை கலந்­து­கொள்­கி­றார்.

இவர் இந்து தமிழ் செய்­தித்­தா­ளில் தலைமை உதவி ஆசி­ரி­யரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

'புதிய அறை­யின் சித்­தி­ரம்' எனும் நூல் இவ­ரது முதல் கவி­தைத் தொகுப்பு.

'கைதி­யின் குரல்' என்­கிற பெய­ரில் குவான்டானமோ சிறை­வா­சி­க­ளின் கவி­தை­களை மொழி­பெ­யர்த்­துள்­ளார்.

'நண்­ப­கல் நேரத்து மயக்­கம்' எனும் மலை­யா­ளத் திரைப்­ப­டத்­தில் வச­ன­கர்த்­தா­வா­க­வும் இணை இயக்­கு­ந­ரா­க­வும் பணி­யாற்­றி­யுள்­ளார்.

கவி­ஞர்­கள் குறித்­தும் கவிதை இயல் குறித்­தும் தொடர்ந்து கட்­டு­ரை­கள் எழுதி­வ­ரு­கி­றார்.

இன்­றைய நிகழ்ச்­சி­யில், இணை­யம் வழி 'தமிழ்க் கவி­தை­க­ளின் போக்­கும் மாற்­ற­மும்' என்ற தலைப்­பில் கவி­ஞர் மண்­கு­திரை சிறப்­பு­ரை­ ஆற்ற இருக்­கி­றார்.

பிடித்த, படித்த கவி­தை­களை வாசித்­தல், 'தன்­னை­ய­றிந்­தால்' எனும் தலைப்­பில் இம்­மா­தப் போட்­டிக் கவி­தை­களை வாசித்­தல் ஆகிய அங்­கங்­க­ளு­டன் பரி­ச­ளிப்­பும் இடம்­பெ­ற­வி­ருக்­கிறது. போட்­டிக் கவி­தை­கள் குறித்த விமர்­சன அங்­க­மும் இடம்­பெ­றும்.

கவிதை ஆர்­வ­லர்­கள் அனை­வ­ரும் நிகழ்ச்­சி­யில் கலந்து­கொள்­ள­லாம்.

அனு­மதி இல­வ­சம்.