சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) முன்னாள் விரிவுரையாளரும் தெம்புசு கல்லூரி ஆய்வாளருமான 43 வயது ஜெரெமி ஃபெர்னாண்டோமீது (படம்) நேற்று மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி மாது ஒருவரை அவர் முத்தமிட்டதாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
முறையற்ற நடத்தை குறித்த புகார்களின் அடிப்படையில், 2020ல் பல்கலைக்கழகம் அவரைப் பணியிலிருந்து நீக்கியதுடன் ஃபெர்னாண்டோ குறித்து காவல்துறையிடம் புகாரளித்தது.
$10,000 பிணையில் வெளிவந்துள்ள அவரது வழக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

