துவாஸ் சோதனைச் சாவடி விபத்து தொடர்பில் 42 வயது ஆடவர் கைது

துவாஸ் சோதனைச் சாவடி விபத்து தொடர்பில் 42 வயது ஆடவர் கைது

1 mins read
d398bf17-bb68-4d26-875c-9970b9af3c24
-

துவாஸ் சோத­னைச் சாவ­டி­யில் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த துணைக் காவல்­படை அதி­கா­ரி­மேல் கார் மோதி­ய­தில் அவ­ருக்­குத் தலை­யில் பலத்த காயம் ஏற்­பட்­டது.

இதன் தொடர்­பில் காரை ஓட்­டிய 42 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டி­யது, அபா­ய­க­ர­மான விதத்­தில் கார் ஓட்­டி­யது ஆகி­யவை தொடர்­பில் அவர்­மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வம் குறித்து வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ர­வுக்­குப் பின் 12.55 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தா­க­வும் அந்த கார் சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்­டது என்­றும் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் தெரி­வித்­தது.

ஓட்­டு­நர் காரை மிக வேக­மா­கச் செலுத்­தி­ய­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

வாக­னம் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­து­டன் அவ­ரது வாக­னம் ஓட்­டும் உரி­மம் உட­ன­டி­யாக ரத்து செய்­யப்­பட்­டது.

சம்­ப­வத்­தில் காய­ம­டைந்த 28 வயது செர்ட்­டிஸ் துணைக் காவல்­படை அதி­காரி தேசி­யப் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்­று­ வ­ரு­கி­றார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசா­ரணை தொடர்­கிறது.