இலகு ரயில் நிலையத் தளமேடையில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

இலகு ரயில் நிலையத் தளமேடையில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

1 mins read
e5c54d5b-c268-4467-84c3-768cea416bc9
-

பொங்­கோல் ஈஸ்ட் இலகு ரயில் பாதை­யில் உள்ள கோவ் நிலை­யத்­தில் நேற்று முன்தினம் இரவு 33 வய­துப் பெண் மாண்டு கிடக்­கக் காணப்­பட்­டார்.

இத­னை­ய­டுத்து பொங்­கோல் ஈஸ்ட், பொங்­கோல் வெஸ்ட் என இரண்டு இலகு ரயில் பாதை­களி­லும் சேவை தடை­பட்­டி­ருப்­ப­தாக எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் இரவு 10.30 மணி­ய­ள­வில் டுவிட்­ட­ரில் பதி­விட்­டது.

முன்­ன­தாக, இலகு ரயில் பாதைக்­க­ருகே அசை­வற்ற நிலை­யில் காணப்­பட்ட அந்­தப் பெண் சம்­பவ இடத்­தி­லேயே மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் பெண்­ணின் இறப்­பிற்­குத் தீய செயல்­ ஏதும் கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கிக்­கப்­ப­ட­வில்லை எனக் காவல்­துறை கூறி­யது.

இலகு ரயில் சேவை தடை­பட்ட நேரத்­தில் இல­வ­சப் பேருந்­துச் சேவை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

பாசிர் ரிஸ்-பொங்­கோல் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இயோ வான் லிங், பய­ணி­கள் மாற்று ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்­ளும்­படி ஃபேஸ்புக் பதி­வில் கேட்­டுக்­கொண்­டார்.

சம்­ப­வம் தொடர்­பான படங்­களில், கோவ் இலகு ரயில் நிலை­யத்­தில் காவல்­து­றை­யி­னர் தடுப்பு அமைத்­தி­ருப்­ப­தை­யும் அவ­சர மருத்­துவ வாக­னம், தீய­ணைப்பு வாக­னம் ஆகி­யவை அங்கு இருப்­ப­தை­யும் காண முடி­கிறது.

நேற்­றுக் காலை இரு பாதை­களி­லும் இலகு ரயில் சேவை­கள் வழக்க நிலைக்­குத் திரும்­பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.