இணைய சூதாட்டம்: விலகியோர் அதிகம்

இணைய சூதாட்டம்: விலகியோர் அதிகம்

2 mins read
674e4fba-cc55-41f4-89df-54d82333bd62
-

2022ல் தாங்களாகவே கைவிட்டவர்கள் 8,731 பேர்

சிங்­கப்­பூர் பூல்ஸ் நிறு­வ­னத்­தின் இணைய சூதாட்­டத்தளத்­தில் இருந்து தாங்­க­ளா­கவே வில­கிக் கொண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 2022ல் கிட்­டத்­தட்ட இரண்டு மடங்­கா­கக் கூடி­யது.

காற்­பந்து போன்ற விளை­யாட்­டு­க­ளின் மீது பந்­த­யம் கட்டு­வதை நிறுத்­தி­வி­டும் முயற்­சி­யாக அவர்­கள் அந்­தச் சுய­மு­டிவை எடுத்­த­னர்.

சிங்­கப்­பூர் பூல்ஸ் நிறு­வ­னத்­தின் இணை­யப் பக்­கத்­தில் இருந்து சென்ற ஆண்­டில் சுய­மாக வில­கிக்­கொண்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 8,731 ஆக இருந்­தது.

இந்த எண்­ணிக்கை, 2021ல் 4,802 ஆக­வும் 2020ல் 4,011 ஆக­வும் 2019ல் 3,720 ஆக­வும் இருந்­தது. சூதாட்டப் பிரச்­சினைக்கு எதிரான தேசிய மன்­றம் இந்த மாதம் இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­களை வெளி­யிட்­டது.

மன­ந­லக் கழ­கத்­தி­லும் இந்த மன்­றத்­தின் அங்­கீ­கா­ரம் பெற்ற அமைப்­பு­க­ளி­லும் சூதாட்­டம் தொடர்­பில் ஆலோ­சனை நாடிய மக்­க­ளின் எண்­ணிக்­கை­யும் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் கொஞ்­சம் அதி­க­ரித்துள்ளது.

சூதாட்­டப் பித்­தில் இருந்து மீண்டு வரு­வ­தற்­கான ஆத­ரவை வழங்­கும் இதர சமூக அமைப்பு­க­ளைச் சேர்ந்த புள்­ளி­வி­வ­ரங்­கள் இதில் சேர­வில்லை.

சிங்­கப்­பூர் பூல்ஸ் இணை­யத்தளத்­தில் ஒரு கணக்­கைத் திறக்க அல்­லது ஒரு கணக்கை நிலை­நாட்டி வரும் வழக்­கத்தைத் தங்­க­ளுக்­குத் தாங்­களே முடித்­துக்­கொள்ள சுய வில­கல் நடை­முறை அனு­ம­திக்­கிறது.

அந்த இணை­யத்தளத்­தில் கணக்கு வைத்­தி­ருப்­போர் குறைந்­த­பட்­சம் 12 மாத காலத்­திற்கு சூதாட்ட காரி­யங்­களில் இருந்து விலகி இருக்க வேண்­டும் என்ற நிபந்­தனை உள்ளது.

சூதாட்டப் பிரச்­சினைக்கு எதிரான தேசிய மன்­றப் பேச்­சா­ளர் இது பற்றி விளக்­கி­னார்.

"இந்த மன்­றம் 2022ல் தனது இணை­யத்தளங்­கள் பற்­றிய புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்­தி­யது.

"சமூ­கப் பாது­காப்­பை­யும் அது எடுத்­துக் கூறி­யது. தன்­னு­டைய இணை­யத்தளங்­கள் இணை­யச் சேவை நுழை­வா­யில்­கள் ஆகி­ய­வற்­றை­யும் மன்­றம் மேம்­படுத்­தி­யது.

"இவை கார­ண­மாக மக்­களில் மேலும் பலர் சூதாட்­டத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­சி­னை­கள் பற்றி எளி­தில் தெரிந்­து­கொண்­டார்­கள்.

"சுய­மாக தாங்­களே வில­கிக் கொள்ள முடிவு செய்து விண்­ணப்­பித்­தார்­கள்," என்று அந்­தப் பேச்­சா­ளர் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் சென்ற ஆண்டு மீண்­டும் திறக்­கப்­பட்­டது. அத­னால் முன்­னி­லும் அதி­க­மான மக்­கள் சூதாட்ட வழி­களை நாடி­னர்.

இவற்­றின் கார­ண­மாக இந்த மன்­றத்­தின் நேரடித் தொலை­பேசி எண் வழி­யாக அல்­லது இணைய உரை­யா­டல் மூல­மாக தொடர்­பு­கொண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை சென்ற ஆண்­டில் அதி­க­ரித்­தது. இந்த எண்­ணிக்கை 2021ல் 9,806 ஆக இருந்­தது. அது சென்ற ஆண்­டில் 10,388 ஆகக் கூடி­யது.

இருந்­தா­லும்கூட கொவிட்-19க்கு முன்பு 2019ல் இந்த எண்­ணிக்கை 14,907 ஆக இருந்­தது.

இத­னி­டையே, அதி­கம் பேர் வில­கிக்கொண்டு இருப்­பது பற்றி கருத்து கூறிய சிங்­கப்­பூர் பூல்ஸ் நிறு­வ­னம், இது ஓர் ஆக்க ­க­ர­மான மேம்­பாடு என்­றது.