செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
571f2900-a040-4238-bef2-1b28fdf8f32b
-

$109 மி. மோசடி பற்றிய விசாரணை

காவல்­துறை ஏறக்­கு­றைய $10.9 மில்­லி­யன் மோசடி தொடர்­பில் 400க்கு மேற்­பட்­டோ­ரி­டம் விசா­ரணை நடத்தி வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளது. விசாரிக்கப்படுவோரில் 275 பேர் ஆண்­கள்; 134 பேர் பெண்­கள். அவர்கள் 16 வய­துக்­கும் 80 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். இம்­மா­தம் 10ஆம் தேதிக்­கும் 23ஆம் தேதிக்­கும் இடை­யில் அதிகாரிகள் நடத்திய சோதனை நட­வ­டிக்­கை­யில் அவர்­கள் பிடி­பட்­ட­தாகக் கூறப்பட்டது. முத­லீடு, மின்­வர்த்­த­கம், வேலை­வாய்ப்பு, இணை­யக்­கா­தல் போன்ற மோச­டி­கள் குறித்து மொத்­தம் 1,050க்கு மேற்­பட்ட வழக்­கு­கள் தொடர்­பில் அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

'ஜேட்' கற்கள் மோசடி குறித்துக் காவல்துறை எச்சரிக்கை

'டிக்டாக்' தளத்தில் நேரலையில் 'ஜேட்' கற்கள் விற்பனை செய்வதாக ஏமாற்றும் மோசடி குறித்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 10 பேர் இத்தகைய மோசடியில் மொத்தம் 95,000 வெள்ளியை இழந்தனர். நேரலையில் விற்கப்படும் 'ஜேட்' கற்களுக்கு மோசடிக்காரர்கள் தரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய பிறகு அவர்கள் பணம் வந்துசேரவில்லை என்று கூறுவர். அல்லது பணம் செலுத்திய பிறகு அவர்களைத் தொடர்புகொள்ள இயலாது. வெட்டப்படாத 'ஜேட்' கற்களில் முதலீடு செய்யும்படி சிலரிடம் பணம் வசூலித்த பின்னர் அவற்றை வெட்டும்போது தரத்துக்கு ஏற்ப கற்களைத் தாங்களே வாங்கிக்கொள்வதாகவும் கூறி மோசடிக்காரர்கள் ஏமாற்றியதாகக் கூறப்பட்டது.