ரெட்ஹில் எம்ஆர்டி நிலைய நடைபாதையை நோக்கி அதி வேகத்தில் வந்த வேன் ஒன்று தடுப்புகள் மீது பயங்கரமாக மோதி நின்றது.
இந்த விபத்தில் பாதுகாப்பு அதிகாரியான டெங் ஹாவ் ஹின் மயிரிழையில் உயிர் தப்பினார்.
ஜாலான் டியோங்கிலிருந்து டியோங் பாரு ரோட்டை நோக்கி அதிவேகத்தில் வந்த வேனை கண்டதும் அவர் நடைபாதையி லிருந்து விலகி நின்றார்.
"சற்று எச்சரிக்கையாக இல்லாமல் இருந்திருந்தால் இந் நேரம் உயிர் போயிருக்கும்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் 53 வயது டெங் தெரிவித்தார்.
வேனிலிருந்து புகை வந்த தாகவும் வழிப்போக்கர்களில் ஒருவர், அணைத்ததாகவும் அவர் சொன்னார்.
அறுபது வயது மதிக்கத்தக்க ஓட்டுநர், முன்பக்கமாக சாய்ந்து இருந்ததாக அவர் கூறினார்.
பிற்பகல் 3.20 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத் தாகக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, விபத்து நிகழ்ந்த எண் 920 தியோங் பாரு சாலை அருகே வந்து சேர்ந்தது.
முன் இருக்கையில் நசுங்கிய பகுதியில் சிக்கியிருந்த ஓட்டுநரை அதிகாரிகள் மீட்டு சுயநினை வின்றி சிங்கப்பூர் பொது மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 72 வயது ஓட்டுநர் பின்னர் இறந்துவிட்டார்.
இருபது நிமிடங்களுக்கு மேலாக அவருக்கு இதயத் துடிப்பை மீட்கச் செய்யும் முதலுதவி சிகிச்சையை துணை மருத்துவர்கள் மேற்கொண்டதாக டெங் மேலும் கூறினார்.
விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியிருந்தது. ஒரு டயர் நடைபாதை மீது ஏறி மறுபக்கம் நீட்டிக் கொண்டிருந்தது. வேன் மோதியதில் தடுப்புகள், நடைபாதையின் கூரை மற்றும் தூண்களும் சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வரு கின்றனர்.

