பணவீக்கம் காரணமாக சிங்கப்பூரில் வாடகையும் இதர செலவுகளும் அதிகரித்து வருகின்றன.
இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரில் செயல்படும் ஐரோப்பிய நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருகின்றன. அதிகரிக்கும் குடியிருப்பு வாடகையால் ஊழியர்களும் கவலை அடைந்துள்ளனர்.
சிங்கப்பூர் ஐரோப்பிய வர்த்தக சபை (யுரோசாம்) நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்தன.
ஆய்வின் முடிவு மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரில் வர்த்தக நடவடிக்கைகளுக்கான செலவுகள் எந்த வகையில் நிறுவனங்களை பாதித்துள்ளன என்பதை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 268 நிறுவனங்கள் ஆய்வில் பங்கேற்றன.
'யுரோசாம்' தன்னிச்சையாக செயல்படும் லாப நோக்கற்ற நிறு வனமாகும்.
ஐரோப்பிய வர்த்தக சமூகத்தைப் பிரதிநிதிக்கும் இந்த அமைப்பு, இரு தரப்பு வர்த்தகம், சேவை, முதலீடுகளை ஐரோப்பாவுக்கும் சிங்கப்பூருக்கும் இவ்வட்டாரத்துக்கும் இடையே மேம்படுத்தி வருகிறது.
சிங்கப்பூரில் வாடகை மற்றும் நடத்தும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 70 விழுக்காடு நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்குவது ஆய்வில் கண்டறியப்பட்டது.
அதிகரித்து வரும் சம்பளம், வாடகை இடங்களுக்கான செலவு அதிகரிப்பு போன்றவை நிறுவனத்தை நடத்தும் செலவுகள் மேலும் அதிகரிப்பதற்கான இதர காரணங்களாகும்.
அதே சமயத்தில் குடியிருப்புக்கான வாடகையும் அதிகரித்து வருவதால் 97 விழுக்காடு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வேலையிடத்தில் இவர்களது திறனும் குறைந்து காணப்படு கிறது.
2022 அல்லது 2023ஆம் ஆண்டில் தங்களுடைய குடியிருப்பு வீட்டுக்கான குத்தகையைப் புதுப்பித்த பாதி ஊழியர்களின் வாடகைச் செலவு மேலும் 40 விழுக்காடு அதிகரித்தது. இவர்களில் 62 விழுக்காட்டினர் வாடகைச் செலவுகளை ஈடுகட்ட தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களிடமிருந்து எந்தவித ஆதரவும் பெறவில்லை அல்லது 1,500 வெள்ளிக்கும் குறைவான ஆதரவைப் பெறுகின்றனர்.
சிங்கப்பூரில் பராமரிப்புச் செலவுகளால் சிரமப்படும் நிறுவனங்கள், நிலைமை மேலும் மோசமடைந்தால் சிங்கப்பூரை விட்டு வெளியேறவும் தயாராக இருப் பதை ஆய்வின் முடிவுகள் காட்டு கின்றன.

