சிறார் பாலியல் துன்புறுத்தல்: 23 ஆடவர்கள் கைது

1 mins read
4a7ab8f9-cc80-449b-8deb-574fa8900c28
-

இணை­யம் மூலம் சிறார் பாலி­யல் துன்­பு­றுத்­தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக நம்­பப்­படும் 23 ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் 22 வய­துக்­கும் 61 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

இது­தொ­டர்­பாக 44 வயது ஆட­வ­ரி­ட­மும் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

சிறார் பாலி­யல் துன்­பு­றுத்­தல் தொடர்­பான படங்­கள், காணொ­ளி­கள், ஆபா­சப் படங்­கள் ஆகி­ய­வற்றை வைத்­தி­ருத்­தல், விநி­யோ­கம் செய்­தல் போன்­ற­வற்­றில் இவர்­கள் அனை­வ­ரும் ஈடு­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

குற்­றப் புல­னாய்­வுத் துறை அதி­கா­ரி­கள் நடத்­திய ஐந்து வார அதி­ரடி நட­வ­டிக்­கை­யில் இவர்­கள் சிக்­கி­னர். அதி­ரடி நட­வ­டிக்கை சிங்­கப்­பூ­ரெங்­கும் பல்­வேறு இடங்­களில் நடத்­தப்­பட்­டன.

அதி­ர­டிச் சோத­னை­யின்­போது சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து கணி­னி­கள், கைப்­பே­சி­கள் போன்ற சாத­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.