ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு உத்தரவு

ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு உத்தரவு

2 mins read
5a3f6134-04ce-4cf1-a0d3-2ec8f49485c5
-

வேலை­யில்­லாத 37 வயது மனை­விக்கு மாதந்­தோ­றும் ஜீவ­னாம்­சம் வழங்க வேண்­டும் என்று ஆட­வ­ருக்கு குடும்ப நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

அப்­பெண்­ணின் 53 வயது கண­வர் ஒரு வழக்­க­றி­ஞர். இரு­வ­ரும் கிட்­டத்­தட்ட ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு சந்­தித்­த­னர். அப்­பெண் ரஷ்­யா­வைச் சேர்ந்­த­வர். அவ­ருக்கு ஏற்­கெ­னவே ஒரு மகள் இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் தாமும் தமது மகளும் தங்கி கல்வி பயில வேண்­டும் என விருப்­பப்­பட்ட அப்­பெண் இது­தொ­டர்­பாக குடி­நு­ழைவு ஆலோ­சனை பெற அந்த வழக்­க­றி­ஞரை அணு­கி­னார்.

அப்­போது இரு­வ­ருக்­கும் இடையே காதல் மலர்ந்து 2020ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர்.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­போது சட்­டப்­பூர்வ ஒப்­பந்­தம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

அதன்படி, மண­மு­றிவு ஏற்­பட்­டால் அப்­பெண்­ணுக்கு அந்த வழக்­க­றி­ஞர் தொடர்ந்து மாதந்­தோ­றும் $2,000 வழங்க வேண்­டும். அத்­து­டன், அப்­பெண்­ணின் மக­ளுக்­குத் தேவை­யான பணத்தை அவர் தர வேண்­டும் என்று ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அது­மட்­டு­மல்­லாது, மண­

மு­றிவு ஏற்­பட்­டால் திரு­ம­ணம் செய்த பிறகு கணவர் வாங்­கும் அனைத்­துச் சொத்­து­களும் தங்­க­ளுக்கு இடையே சரி­பா­தி­யா­கப் பிரிக்­கப்­பட வேண்­டும் என்று தம்­ப­தி­யர் ஒப்­பந்­தம் செய்­து­கொண்­ட­னர்.

ஆனால் திரு­ம­ணத்­துக்கு முன்­பும் பின்­பும் அப்­பெண்­ணின் பெய­ரில் வாங்­கப்­பட்ட சொத்­து­கள் எந்­தச் சூழ்­நி­லை­யி­லும் பிரிக்­கப்­ப­டாது என்று ஒப்­பந்­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்­துக்­குள் அப்­பெண்­ணுக்கு அந்த வழக்­க­றி­ஞர் $100,000 தர வேண்­டும் என்றும் ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதன் பிறகு, தமது மக­ளு­டன் தங்­ளின் வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு அடுக்­கு­மாடி வீட்­டில் அப்­பெண் வசித்­து­ வந்­தார். அந்த ஆட­வர் புக்­கிட் தீமா­வில் தமது தாயா­ரு­டன் வசித்­தார். அவ்­வப்­போது தமது மனை­வியை அவர் வந்து பார்த்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து அப்­பெண்­ணுக்­குப் பணம் கொடுப்­பதை அந்த வழக்­க­றி­ஞர் நிறுத்­தி­னார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் ரஷ்­யப் பெண்­க­ளுக்­குப் பணம் கொடுத்து காணொளி அழைப்­பு­கள் மூலம் தமது கண­வர் பாலி­யல் சேவை பெற்­றுக்­கொண்­ட­தைக் கண்­டு­பி­டித்­த­தாக அப்­பெண் தெரி­வித்­தார்.

இத­னைத் தொடர்ந்து, வாட­கைத் தொகை $3,500 உட்­பட மாதந்­தோ­றும் $8,500 கேட்டு தமது கண­வ­ருக்கு எதி­ராக அந்த ரஷ்­யப் பெண் வழக்கு தொடுத்­தார். அந்த ஆட­வர் தமது மனை­விக்கு 2021ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் முதல் மாதந்­தோ­றும் $2,592 வழங்க வேண்­டும் என்று மாவட்ட நீதி­பதி கேத்­ரின் தோங் உத்­த­ர­விட்­டார். மனை­விக்கு வாடகை வீடு கிடைத்­த­தும் வாட­கை­யைச் செலுத்­து­வ­தற்­காக மாதந்­தோ­றும் கூடு­த­லாக $3,500 வழங்க வேண்­டும் என்­றும் வழக்­க­றி­ஞ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. அதன்­படி, மனை­விக்கு வாட­கை வீடு கிடைத்­த­தும் அந்த ஆட­வர் மாதந்­தோ­றும் மொத்­தம் $6,092 செலுத்த வேண்­டும்.

மனை­வி­யின் மருத்­து­வச் செல­வை­யும் அந்த ஆட­வர் ஏற்க வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.