அனுமதியின்றி மாடியை அமைத்த நிறுவன இணை உரிமையாளருக்கு $50,000 அபராதம்

அனுமதியின்றி மாடியை அமைத்த நிறுவன இணை உரிமையாளருக்கு $50,000 அபராதம்

2 mins read
aee945b8-c552-4475-869a-eb91f3937d65
-

சொத்து முகவை நிறு­வ­னத்­தின் இணை உரி­மை­யா­ள­ரான ஒரு­வர் சுமார் பத்து ஆண்­டு­க­ளாக 5,381 சதுர அடி பரப்­ப­ள­வுள்ள கூடு­தல் இடத்தை சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­க­ளின் அனு­ம­தி­யின்றி கட்டி பயன்­ப­டுத்தி வந்­தார்.

சட்­ட­வி­ரோதமாக கட்­டப்­பட்ட அந்த இணை மாடி, அலெக்­சாண்­டிரா ரோட்­டில் உள்ள 'தி அலெக்­சி­யர்' கட்­ட­டத்­தின் எட்­டா­வது மாடி­யில் உள்ள அலு­வ­ல­கத்­தில் சம அள­வி­லான நிலப்­ப­ரப்­பைக் கொண்­ட­தாக இருந்­தது. அது அலு­வ­ல­கப் பணி­க­ளுக்­கா­க­வும் கோப்­பு­களை சேமித்­து­வைக்­கும் இட­மா­க­வும் தக­வல்­தொ­ழில்­நுட்­பச் சாத­னங்­கள், பழு­து­பார்ப்­புக் கரு­வி­கள் வைக்­கும் இட­மா­க­வும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­தக் குற்­றத்­துக்­காக இயோ­வுக்கு நேற்று $50,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. கட்­ட­டத்­தின் எட்­டா­வது மாடி­யில் அனு­ம­தி­யின்றி இணை மாடி ஒன்றை அமைத்த குற்­றத்தை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

தீப் பாது­காப்­புப் பணி தொடர்­பான சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் ஆணை­யா­ள­ரின் அனு­ம­தி­யின்­றி­யும் அவர் அந்த இணை மாடியை அமைத்­தார். தண்­டனை விதிப்­பின்­போது மேலும் இரு குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

கட்­டட கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்­தின்­படி, முறை­யான அனு­மதி­யின்றி கட்­டட வேலை­யில் ஈடு­படும் ஒரு­வ­ருக்கு $200,000 வரை­யி­லான அப­ரா­தம், இரண்டு ஆண்­டு­கள் வரை­யி­லான சிறை அல்­லது இரண்­டும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­ப­ட­லாம்.

2008க்கும் 2009க்கும் இடைப்­பட்ட காலத்­தில் கட்­டப்­பட்ட அந்த இணை மாடி தொடர்­பான விவ­கா­ரம், யாரோ ஒரு­வ­ரால் அளிக்­கப்­பட்ட ரக­சிய தக­வ­லுக்­குப் பிறகு அம்­ப­ல­மா­னது.

சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் 2019 பிப்­ர­வரி மாதத்­தில் அந்­தக் கட்­ட­டத்­தைச் சோத­னை­யிட்­ட­ன.

திரு இயோ­வும் அவ­ரது மனை­வி­யான கெய்ன் சிம்­மும் 'தி அலெக்­சி­யர்' கட்­ட­டத்­தின் எட்­டா­வது மாடி­யில் உள்ள அலு­வ­ல­கத்­தின் உரி­மை­யா­ளர்­கள். அவர்­கள் ZACD இன்­வெஸ்­மெண்ட்ஸ் எனும் சொத்து முத­லீட்டு நிறு­வ­னத்தை நடத்தி வந்­த­னர்.

'தி அலெக்­சி­யர்' கட்­ட­டத்­தின் எட்­டா­வது மாடி­யில் உள்ள கூடு­தல் இடத்தை தனது வர்த்­த­கத்­துக்­காக பயன்­ப­டுத்த 2008ஆம் ஆண்டு முற்­ப­கு­தி­யில் திரு இயோ எண்­ணி­யி­ருந்­தார். ஆனால், அந்த இணை மாடியை அமைப்­பதற்கு சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து முறை­யான அனு­மதி பெறப்­பட்­டதா என்று உறு­திப்­படுத்த இரு­வ­ரும் தவ­றி­விட்­ட­னர் என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் உத்­த­ர­வின்­படி அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட அந்த இணை மாடி 2019 ஏப்­ரல் மாதம் இடிக்­கப்­பட்­டது.