நீண்டகால அதிகாரப் பத்திரம்: இலவசப் பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு

1 mins read
a2eb6331-af2b-4e59-986a-3c30cb99c145
-

சுய­மாக முடி­வெ­டுக்­கும் ஆற்­றலை இழக்க நேரிட்­டால் தங்­கள் சார்­பில் முடி­வெ­டுக்க ஒரு­வ­ருக்கு அதி­கா­ரம் வழங்­கும் நீண்­ட­கால அதி­கா­ரப் பத்­தி­ரத்­தைப் பதி­வு­செய்ய விரும்­பு­வோர் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அதற்­குக் கட்­ட­ணம் செலுத்­த தேவை­யில்லை.

இதற்­கான கட்­ட­ணம் $75. ஆனால் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இது 2026 மார்ச் வரை இல­வ­சம் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­தார்.

அமைச்­சர் நேற்று ஃபேஸ்புக்­கில் இது­கு­றித்­துப் பதி­விட்­டார்.

நீண்­ட­கால அதி­கா­ரப் பத்­தி­ரத்­துக்­கான பொதுக் காப்­பா­ளர் அலு­வ­ல­கம் சென்ற ஆண்டு நவம்­ப­ரில் தொடங்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்த நான்கு மாதங்­களில் இந்த பத்­தி­ரம் தொடர்­பில் 26,000க்கு மேற்­பட்ட இணைய விண்­ணப்­பங்­கள் பெறப்­பட்­டன என்­றார் அமைச்­சர் மச­கோஸ்.

இப்­பத்­தி­ரம் குடும்ப உறுப்­பினர்­க­ளுக்கு மன­அ­மை­தி­யைத் தரும். அன்­புக்­கு­ரி­ய­வ­ரின் இறுதி ஆசையை நிறை­வேற்ற உத­வும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஆரோக்­கி­ய­மான மன­நி­லை­யில் இருக்­கும் ஒரு­வர், வருங்­கா­லத்­தில் தான் முடிவு எடுக்­கும் ஆற்­றலை இழக்க நேரிட்­டால் தன் சார்­பில் முக்­கிய முடி­வு­களை எடுக்­கும் அதி­கா­ரத்தை வழக்­க­றி­ஞர், கணக்­கா­ளர், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அல்­லது சமூக சேவைத் துறை ஊழி­யர் போன்ற தொழில்­முறை வல்­லு­நர்­க­ளுக்கு வழங்­க­லாம். வல்­லு­நர்­கள் இதற்­கு­ரிய சான்­றி­த­ழைப் பெற்­றி­ருப்­பது அவ­சி­யம்.