பிப்ரவரியில் கூட்டுரிமை, வீவக வீட்டு வாடகை அதிகரிப்பு

பிப்ரவரியில் கூட்டுரிமை, வீவக வீட்டு வாடகை அதிகரிப்பு

2 mins read
13de899c-bcbc-4766-a1a9-b513fd12d9f8
-

குறைந்த அள­வில் வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டி­ருந்­தா­லும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், கூட்டுரிமை வீடு­க­ளுக்­கான வாடகை பிப்­ர­வரி மாதத்­தில் ஏறு­மு­க­மாய் இருந்­தது என்­றும் சில வாட­கை­தா­ரர்­கள் அண்­மைய மாதங்­களில் அதி­க­ரித்­து­வ­ரும் வாடகை உயர்­வுக்கு எதி­ராக அதி­ருப்தி தெரி­வித்­தார்­கள் என்றும் பகுப்­பாய்­வா­ளர்­கள் கவ­னித்­துள்­ளார்­கள்.

கூட்டுரிமை வீட்டு வாடகை பிப்­ர­வ­ரி­யில் 3.5% என வேக­மாக அதி­க­ரித்­தது. ஜன­வ­ரி­யில் அது 1.4% அதி­க­ரிப்­பாக இருந்­தது என்று 99.co, எஸ்­ஆர்­எக்ஸ் சொத்­துச் சந்தை தளங்­கள் நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­களில் தெரியவந்­தது.

வீவக வீட்டு வாடகை பிப்ர ­வ­ரி­யில் 1.2% அதி­க­ரித்­தது. ஒப்­பு­நோக்க ஜன­வ­ரி­யில் அந்த அதி­க­ரிப்பு 0.6%ஆக இருந்­தது.

கூட்டுரிமை வீடு­க­ளுக்­கான வாடகை தொடர்ந்து 26வது மாத­மா­க­வும் வீவ­க வீடு­களுக்­கான வாடகை தொடர்ந்து 32வது மாத­மா­க­வும் உயர்ந்­தி­ருப்­பதை இது காட்­டு­கிறது.

ஆனால், தொடர்ந்து இடம்­பெற்று வரும் வலு­வான வாடகை உயர்­வுக்­குப் பிறகு, வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களுக்­கும் வாட­கை­தா­ரர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்­கும் இடையே அண்­மைய மாதங்­களில் ஏற்­றத்­தாழ்வு வளர்ந்­து­வ­ரு­கிறது என்று சில சொத்து முக­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

"வாடகை உயர்வை வாட­கை­தா­ரர்­கள் சகித்­துக்­கொள்ள தொடங்­கி­யுள்­ள­னர். ஆனால் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் பலர் தொடர்ந்து இரண்டு ஆண்­டு­களுக்கு மேல் வாடகை உயர்­வின் பலனை அனு­ப­வித்து வந்­தா­லும் தங்­கள் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­து­கொள்­வ­தில் விடாப்­ப­டி­யாக இருக்­கின்­ற­னர்," என்று ஆரஞ்ச்டீ & டீ சொத்து முக­வர் நிறு­வ­னத்­தின் ஆராய்ச்சி, பகுப்­பாய்வு பிரி­வின் மூத்த உத­வித் தலை­வர் கிறிஸ்­டின் சன் தெரி­வித்­தார்.

"அதி­க­மான பரா­ம­ரிப்­புச் செலவு­கள், சொத்து வரி, அடை மா­னக் கட்­ட­ணங்­கள் ஆகி­ய­வற்­றால் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் சிர­மப்­படு­கி­றார்­கள். அதே­வே­ளை­யில், வாட­கை­தா­ரர்­கள் கடந்த ஓர் ஆண்­டில் வாடகை குறிப்­பி­டத்­தக்க அள­வு உயர்ந்­தி­ருப்­ப­தால், கூடு­தல் வாடகை தர மறுக்­கின்­ற­னர்," என்­றும் திரு­வாட்டி சன் கூறி­னார்.

இந்த ஏற்­றத்­தாழ்வே பிப்­ர­வரி மாதத்­தில் குறை­வான வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­ட­தற்­குக் கார­ண­மா­கக் கூற­லாம் என்­றும் அவர் சுட்­டி­னார்.

பிப்­ர­வ­ரி­யில் கிட்­டத்­தட்ட 5,119 கூட்டுரிமை வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன. இது ஜன­வ­ரி­யு­டன் ஒப்­பி­டும்­போது 18.6% சரிவு. ஜன­வ­ரி­யில் 6,285 கூட்டுரிமை வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன.

வீவக வீடு­களை எடுத்­துக்­கொண்­டால், பிப்­ர­வ­ரி­யில் 2,619 வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன. இது ஜன­வ­ரி­யு­டன் ஒப்­பி­டும்­போது 7.2% சரிவு. ஜன­வ­ரி­யில் 2,822 வீவக வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன.

2023க்கும் 2025க்கும் இடைப்­பட்ட காலத்­தில் 100,000 தனி­யார் மற்­றும் வீவக வீடு­கள் கட்டி முடிக்­கப்­படும் என்­ப­தால், அது தற்­போ­தைய வாடகை சந்­தை­யின் திசையை மாற்­றி­வி­டக்கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

18,000 வீடு­க­ளைக் கொண்ட 25 கூட்டுரிமை தொகு­தி­கள் கட்டி முடிக்கப்பட்டு இவ்­வாண்­டில் குடி­யி­ருப்­புக்­காக விடப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­படு­வ­தால், முத­லீட்­டுக்­காக வீடு­களை வாங்கு­வோர் அவற்றை வாட­கைக்கு விடக்கூடும்.

ஐந்து ஆண்­டு­கள் தாங்கள் வாங்கிய வீட்­டில் கட்டாயம் குடி­யி­ருக்க வேண்­டும் என்ற காலக்­கெடு சுமார் 15,000 வீடு­க­ளுக்கு இவ்­வாண்டு இறுதிக்குள் முடி­வடை­யும் என்­ப­தால், அந்த வீடு­களும் வாட­கைக்கு விடப்­ப­ட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.