பொதுப் போக்குவரத்து இயங்கும் நேரம் நீட்டிப்பு

பொதுப் போக்குவரத்து இயங்கும் நேரம் நீட்டிப்பு

2 mins read
7fbed39d-79db-4114-a77a-a5b59bb94c4a
-

அடுத்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று புனித வெள்ளி அனு­ச­ரிக்­கப்­

ப­டு­கிறது.

அதற்கு முந்­திய நாளன்று பொதுப் போக்­கு­வ­ரத்து இயங்­கும் நேரம் நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதை­களில் ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் எம்­ஆர்டி நிலை­யங்­களை நோக்­கிச் செல்­லும் கடைசி ரயில்­கள் பின்­னி­ரவு 12.30 மணிக்கு சிட்டி ஹால் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து புறப்­பட்­டுச் செல்­லும்.

வட்ட ரயில் பாதை­யில் ஹாபர்­ஃபி­ரண்ட் எம்­ஆர்டி நிலை­யத்தை நோக்­கிச் செல்­லும் கடைசி ரயில் இரவு 11.55 மணிக்கு டோபி காட் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து புறப்­பட்­டுச் செல்­லும். எதிர்­தி­சை­யில் கடைசி ரயில் இரவு 11.30 மணிக்­குப் புறப்­பட்­டுச் செல்­லும்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் கார்­டன்ஸ் பை தி பே எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து கடைசி ரயில் பின்­னி­ரவு 12.25 மணிக்­குப் புறப்­பட்டு உட­லண்ட்ஸ் நார்த் எம்­ஆர்டி நிலை­யத்தை நோக்­கிச் செல்­லும்.

எதிர்­தி­சை­யில் செல்­லும் ரயில் பின்­னி­ரவு 12.02 மணிக்­குப் புறப்­பட்­டுச் செல்­லும்.

வடக்கு-கிழக்கு ரயில் பாதை­யில் கடைசி ரயில் பின்­னி­ரவு 12.30 மணிக்கு ஹாபர்­ஃபி­ரண்ட் எம்­ஆர்டி ரயில் நிலை­யத்­தி­லி­ருந்­தது புறப்­பட்டு பொங்­கோல் எம்­ஆர்டி நிலை­யத்தை நோக்­கிச் செல்­லும்.

எதிர்­தி­சை­யில் செல்­லும் ரயில் பின்­னி­ரவு 12.02 மணிக்­குப் புறப்­படும்.

டௌன்­ட­வுன் ரயில் பாதைக்­கான ரயில் சேவை­கள் இயங்­கும் நேர­மும் நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

பின்­னி­ரவு 12.03 மணிக்கு புக்­கிட் பாஞ்­சாங் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து கடைசி ரயில் புறப்­பட்டு எக்ஸ்போ எம்­ஆர்டி நிலை­யத்தை நோக்­கிச் செல்­லும்.

எதிர்­தி­சை­யில் செல்­லும் ரயில் பின்­னி­ரவு 12.04 மணிக்­குப் புறப்­படும்.

எல்­ஆர்டி சேவை­யைப் பொறுத்­த­வரை, செங்­காங் மற்­றும் பொங்­கோல் எல்­ஆர்டி பாதை­களில் மட்­டுமே சேவை நேரம் நீட்­டிக்­கப்­படும்.

வடக்கு-கிழக்கு ரயில் பாதை­யில் கடைசி ரயில்­கள் அவற்­றின் இறுதி நிலை­யத்தை அடை­யும் வரை இவ்­விரு எல்­ஆர்டி பாதை­களில் சேவை­ வழங்­கப்­படும்.

புனித வெள்­ளிக்கு முதல் நாள் இர­வில் பேருந்­துச் சேவை­கள் நீட்­டிக்­கப்­படும் என்று பொதுப் பேருந்­துச் சேவை வழங்­கும் நான்கு நிறு­வ­னங்­களும் தெரி­வித்­துள்­ளன.

வார­யி­று­தி­யில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் எதிர்­பார்ப்பு

அடுத்த வார­யி­று­தி­யில் உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­களில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்கு சிங் மிங் (ஏப்­ரல் 5), புனித வெள்ளி (ஏப்­ரல் 7) கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

எனவே, அடுத்த வார­யி­று­தி­யில் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சாலை வழி­யாக மலே­சி­யா­வுக்­குச் செல்­லத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்­கள் இதைக் கருத்­தில்­கொள்ள வேண்­டும் என்று குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டது.