நிதி திரட்டு: ஸ்ரீ நாராயண மிஷனுக்கு ஆதரவளிக்கும் 'சிக்கி'

நிதி திரட்டு: ஸ்ரீ நாராயண மிஷனுக்கு ஆதரவளிக்கும் 'சிக்கி'

2 mins read
8dca94d6-66a5-4aad-ae61-0e87cfa86e0a
-

சபிதா ஜெயகுமார்

சமூக சேவை நிறு­வ­ன­மான ஸ்ரீ நாரா­யண மிஷன் தனது செயல்­பாட்­டுத் தேவை­க­ளுக்­காக நிதி திரட்­டும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது. நிதி திரட்ட ஸ்ரீ நாரா­யண மிஷ­னுக்கு உதவ 'சிக்கி' எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழில் சபை­யின் தொண்­டூ­ழிய பிரி­வான 'சிக்கி கேர்ஸ்' முன்­வந்­துள்­ளது.

இந்த நிதி திரட்டு நிகழ்ச்சி ஸ்ரீ நாரா­யண மிஷ­னின் 75வது ஆண்­டு­வி­ழாவை கொண்­டா­டும் வகை­யில் அமை­கிறது. அடுத்த ஆண்டு நூற்­றாண்டு விழா கொண்­டா­டும் 'சிக்கி' அமைப்­பும் கொண்­டாட்ட உணர்­வு­டன் சமூ­கத்­திற்­குச் சேவை­யாற்­றும் வகை­யில் நிதி திரட்டு நிகழ்ச்­சி­யில் இணைந்து கொண்­டுள்­ளது.

இன்று ஆர்க்­கிட் கண்ட்ரி கிளப்­பில் நடை­பெ­ற­வி­ருக்­கும் கோல்ஃப் நிதி திரட்டு நிகழ்ச்­சி­யின் மூலம் $375,000 நிதி திரட்டி உதவ 'சிக்கி' அமைப்பு உறுதி

அளித்­துள்­ளது.

இன்று மாலை இடம்­பெ­றும் விருந்து நிகழ்ச்­சி­யில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் சார்­பாக சுகா­தார அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் திரு சான் யெங் கிட் கலந்­து­கொள்­கி­றார்.

அற­நி­று­வ­னம் என்ற அங்கீகாரத்தைப் பெற்­றுள்ள மத­சார்­பற்ற சமூக சேவை அமைப்­பான ஸ்ரீ நாரா­யண மிஷன் 1948ல் நிறு­வப்­பட்­டது. இன, சமய வேறு­பா­டு­களைப் பாராது பின்­தங்­கி­ய­வர்­க­ளுக்­குப் பல­த­ரப்­பட்ட சமூக சேவை­களை வழங்கி வரு­கிறது. இது­வரை மூன்று அற­நி­று­வன வெளிப்படைத்தன்மை விரு­து­களை வென்­றுள்­ளது ஸ்ரீ நாரா­யண மிஷன். நிதி திரட்டு நிகழ்ச்­சி­கள் மூலம் கிடைக்­கும் நிதி­யைப் பயன்­ப­டுத்தி அதன் தாதிமை இல்­லங்­க­ளை­யும் மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளை­யும் ஸ்ரீ நாரா­யண மிஷன் சீராக நடத்­து­கிறது.

இத்­த­கைய ஓர் அற நிறு­வ­னத்­திற்­கும் அதன் உன்­னத முயற்­சி­க­ளுக்­கும் ஆத­ரவு அளிப்­ப­தில் பெரு­மைப்­ப­டு­வ­தாக 'சிக்கி' கூறு­கிறது.

"உறுப்­பி­னர்­க­ளின் வளர்ச்­சி­யும் மேம்­பா­டும் எங்­க­ளது முதன்மை நோக்­க­மா­க இருந்­தா­லும் வர்த்­த­கச் சங்­கங்­கள் மற்­றும் தொழில் சபை­கள் சமூக பொறுப்பு இலக்­கு­களை எட்­ட­வும் உத­வு­கி­றோம். நூற்­றாண்டு விழாவை கொண்­டாட இருக்­கும் 'சிக்கி', நிதி திரட்­டும் நிகழ்ச்சி மூலம் சிங்­கப்­பூ­ரின் மூப்­ப­டை­யும் மக்­கள்­தொ­கைக்­குப் பங்­காற்­று­வது பொருத்­த­மா­னது," என்று 'சிக்கி' அமைப்­பின் தலை­வர் திரு நீல் பரேக் தெரி­வித்­தார்.

இந்த கோல்ஃப் நிதி திரட்டு நிகழ்ச்­சிக்­குத் தலைமை வகிப்­பவர் 'சிக்கி கேர்­ஸின்' தலை­வ­ரும் கோல்ஃப் ஆட்­டத்­தில் அதீத ஆர்­வம் உள்­ள­வ­ரு­மான சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழில் சபை­யின் துணை தலை­வர் திரு

ம.ச. மணி­யம்.

சமூகத்திற்குத் தேவையான சிறந்த பராமரிப்பையும் உதவிகளையும் வழங்க நிதி திரட்டு முயற்சிகள் பெரும் உதவியாக இருக்கின்றன என்று குறிப்பிட்டார் ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் தலைவர் திரு ஜெயதேவ் உன்னிதன்.