முதலாளியின் மகன் பொய் சொன்னதை ஒப்புக்கொண்டார்

முதலாளியின் மகன் பொய் சொன்னதை ஒப்புக்கொண்டார்

2 mins read
cb2988ec-6a0e-484b-9223-5b68dd4c353b
-

இந்தோனீசிய பணிப்பெண் பார்ட்டி லியானி மீதான வழக்கில் புதிய திருப்பம்

சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தின் முன்­னாள் தலை­வர் லியூ மன் லியோங்­கின் மக­னான கார்ல் லியூ, மாவட்ட நீதி­ப­தி­யி­டம் பொய்­யு­ரைத்­ததை ஒப்­புக்­கொண்­டார்.

அவர்­க­ளின் இல்­லப் பணிப்­பெண்­ணாக இருந்த திரு­வாட்டி பார்ட்டி லியானி, தங்­கள் குடும்­பத்­தி­ன­ருக்­குச் சொந்­த­மான சில பொருள்­க­ளைத் திரு­டி­ய­தா­கத் தொடுக்­கப்­பட்ட வழக்­கில் தான் பொய்­யு­ரைத்­ததை நேற்று அவர் ஒப்­புக்­கொண்­டார்.

45 வய­தா­கும் கார்ல் லியூ மீது அர­சாங்க ஊழி­ய­ரி­டம் தவ­றான தக­வல் தந்­தது தொடர்­பில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

தற்­போது 49 வய­தா­கும் திரு­வாட்டி பார்ட்டி இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்­த­வர். 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் லியூ­வின் வீட்­டில் இல்­லப் பணிப்­பெண்­ணா­கச் சேர்ந்­தார்.

அவ­ரி­டம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் வீட்டு வேலை­கள் மட்­டு­மன்றி வேறோர் இடத்­தில் அமைந்­தி­ருக்­கும் லியூ­வின் அலு­வ­ல­கத்­தை­யும் தூய்­மைப்­படுத்­தும்­படி கூறப்­பட்­டது.

கூடு­தல் வேலை செய்­வ­தில் விருப்­ப­மில்லை என்று திரு­வாட்டி லியானி கூறி­னார். எனவே 2016 அக்­டோ­ப­ரில் லியூ குடும்­பத்­தி­னர் அவரை வேலை­யி­லி­ருந்து நீக்­கி­னர்.

மூன்று பெட்­டி­களில் அவ­ரது உடை­மை­களை அடுக்கி வைத்­துப் புறப்­பட அவ­ருக்கு இரண்டு மணி நேரம் மட்­டுமே வழங்­கப்­பட்­டது.

தான் இந்­தோ­னீ­சியா திரும்பு­வதற்கு முன்­பாக மனி­த­வள அமைச்­சி­டம் புகா­ர­ளிக்­கப் போவ­தாக லியானி மிரட்­டல் விடுத்­தார். மேலும் தனது உடை­மை­கள் அடங்­கிய பெட்­டி­களை இந்­தோ­னீ­சியா அனுப்­பு­வ­தற்­கான செல­வை­யும் முத­லாளி ஏற்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

அவர் தாய­கம் திரும்­பிய மறு­நாள், தங்­கள் குடும்­பத்­துக்­குச் சொந்­த­மான பொருள்­களை­யும் பெட்­டி­களில் அடுக்­கி­யி­ருந்­த­தாக லியானி மீது லியூ குடும்­பத்­தி­னர் காவல்­துறை­யி­டம் புகார் அளித்­த­னர்.

2016 டிசம்­ப­ரில் சிங்­கப்­பூர் வந்த லியானி கைது செய்­யப்­பட்­டார். ஈராண்­டு­க­ளுக்­கு­மேல் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட அவர், மேல்­மு­றை­யீடு செய்­த­தில் குற்­றச்­சாட்­டி­ல் இருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

தற்­போது கார்ல் லியூ 'பார்க்­கின்­சன்ஸ் நோய்' எனும் நடுக்கு வாதத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ­ருக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி தண்­டனை விதிக்­கப்­படும்.