பூகிஸ் தாக்குதல்; மேலும் ஒருவர்மீது குற்றச்சாட்டு

பூகிஸ் தாக்குதல்; மேலும் ஒருவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
8e058e7a-3aeb-4c12-a73d-e22fa66b8f66
-

பூகிஸ் வட்­டா­ரத்­தில் கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த கத்­திக் குத்­துத் தாக்­கு­தல் தொடர்­பில் மூன்­றா­வது நபர்­மீது நேற்று குற்­றம் சாட்­டப்­பட்டது.

சிங்­கப்­பூ­ர­ரான முக­மது குஃப்ரான் சினார்­ஃபத்லி எனும் 22 வயது ஆட­வர் சென்ற ஆண்டு போதைப்­பொ­ருள் தொடர்­பான வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்.

அவ்வழக்கில் பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட அவர் மீண்­டும் விசா­ர­ணைக்கு வரத் தவ­றி­ய­தால் ஆடவ­ருக்­குக் கைதாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

பூகிஸ் தாக்குதல் வழக்கில் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள 18 வயதுச் சிறுவன் 2021ஆம் ஆண்டு நடந்த தாக்குதலின் தொடர்பில் கைதாணை பிறப்பிக்கப்பட்டவர்.

அப்போது அவர் வயது 17 என்பதால் இந்தோனீசியரான அச்சிறுவனைப் பற்றிய மேல்விவரங்களை வெளியிட இயலாது.

பூகிஸ் தாக்குதல் தொடர்பில் சிங்கப்பூரரான 25 வயது நூர்லியானா ஹஸுலியானி எனும் பெண் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூவரும் கடந்த திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டலில் ஓர் ஆடவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.