950,000 குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு கட்டணக் கழிவு

950,000 குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு கட்டணக் கழிவு

1 mins read
aeab2414-5bae-4cbc-9251-f980e1e82b68
-

ஒவ்­வொரு காலாண்­டி­லும் வழங்­கப்­படும் ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு யு-சேவ் மற்­றும் சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணக் கழிவை வீவக வீட்டில் வசிக்கும் ஏறக்­கு­றைய 950,000 சிங்­கப்­பூ­ர் குடும்­பங்­கள் இம்­மா­தம் பெறும் என்று நிதி அமைச்சு நேற்று கூறி­யது.

தகுதி உள்ள ஒவ்­வொரு குடும்­ப­மும் ஏப்­ர­லில் தொடங்­கும் நிதி ஆண்டு 2023ல், வீட்­டின் அள­வைப் பொறுத்து $440 முதல் $760 வரை­யி­லான கட்­ட­ணக் கழிவுக­ளைப் பெறும். இந்­தத் தொகை, நிதி ஆண்டு 2022ல் அளிக்­கப்­பட்­ட­தைப்­போல இருக்­கும். நிதி ஆண்டு 2022ல் யு-சேவ் கட்­ட­ணக் கழிவு இரு­ம­டங்­காக்­கப்­பட்­டது. இந்­தக் கட்­ட­ணக் கழிவு பய­னீட்­டுக் கட்­ட­ணப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றும்.

அதே­போல, குடி­யி­ருப்­புப் பேட்டை பரா­ம­ரிப்­புக்­கா­ன சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத்­தி­லும் 1.5 மாதங்­கள் முதல் 3.5 மாதங்­கள் வரை­யி­லான கழிவு இடம்­பெ­றும்.

பண­வீக்­கம், ஜிஎஸ்டி ஆகிய வற்றின் அதிகரிப்பை ஈடு­செய்ய­இவ்­வாண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­ட­தற்கு இணங்க இந்­தக் கட்­ட­ணக் கழிவு கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.