தென்கிழக்கு ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற சுவர்ப்பந்து விளையாட்டு வீரர் விவியன் ரமணன் மீது நேற்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. விவியன், 37, இதுவரை மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
2017 கோலாலம்பூர் விளையாட்டில் ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் வென்ற இரட்டையரில் அவரும் ஒருவர்.
சிங்கப்பூர் சுவர்ப்பந்து பயிற்சி நிலையத்தின் முன்னாள் உரிமையாளரான அவர் மீது, செம்பவாங் ஹில்ஸ் டிரைவ் வழியாகச் சென்றபோது வாகனத்தை முறையாக கட்டுப்பாட்டுடன் ஓட்டவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த வாகனத்தின் பாதையில் இவரது கார் நுழைந்து விபத்து ஏற்பட்டது.
2022 மே 21ஆம் தேதி காலை பத்து மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் விவியன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக நம்பப்படுகிறது.
இந்த வழக்கு செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறை குற்றத்திற்கு 10,000 வெள்ளி அபராதமும் ஓராண்டு சிறைத் தண் டனையும் விதிக்கப்படலாம்.

