நான்கு ஆமைகள் மீட்பு

நான்கு ஆமைகள் மீட்பு

1 mins read
6e2c4156-7a0e-4c24-94e9-473b8ea9f257
-

கோழி­கள் கொத்தி காயம் அடைந்த நான்கு ஆமை­களை தேசிய பூங்­காக் கழ­கம் மீட்­டுள்­ளது. அங் மோ கியோ­ சமூ­கப் பண்­ணை­யில் ஆமை­கள் வளர்க்­கப்­படும் விதம் குறித்து சிலர் கவலை தெரி­வித்­த­தைத் தொடர்ந்து கழ­கம் நட­வ­டிக்கை எடுத்­தது.

திரு கய் கன்­சிக்­லி­ய­ரே­வும் 58, அவ­ரது மனை­வி­யும் வளர்ப்பு மீன் தொட்டிகளை விற்­ ப­தற்­காக அங் மோ கியோ தொழில்­பேட்டை 2ல் உள்ள கடைக்­குச் சென்­ற­னர். அப்­போது பக்­கத்­தில் இருந்த பண்­ணை­யில் ரத்­தம் வழிந்­து­கொண்­டி­ருந்த ஆமை­யைக் கண்­ட­னர். ஆமை­யின் ஓட்­டின் மீது ரத்­தம் வழிந்­து­கொண்­டி­ருந்த இடத்­தில் கோழி­கள் கொத்­திக் கொண்­டி­ருந்­த­தால் அவர் அதிர்ச்சி அடைந்­தார். தொழிற்பேட்டை­யில் ஏழு புளோக்­கு­கள் அள­வுக்குப் பரந்­துள்ள சமூ­கப் பண்­ணையை அங் மோ கியோ தொழிற்­பேட்டை 2ன் சங்­கத்­தி­னர் உரு­வாக்கி பரா­ம­ரித்து வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் மீட்­கப்­பட்ட நான்கு ஆமை­கள் தங்­க­ளு­டைய பரா­ம­ரிப்­பில் இருப்­ப­தாக தேசிய பூங்­காக் கழ­கம் நேற்­றைய அறிக்­கை­யில் தெரி­வித்­தது.