தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் ஆகப் பெரிய இறுதிச் சடங்கு நிலையம்

2 mins read
5a14ee54-bbfe-41dc-bc6c-31aae408564c
-

இறு­திச் சடங்­கு­களை மேற்­கொள்­வ­தற்­கான ஒன்­பது மாடி நிலை­யம் உட்­லண்ட்­சில் திறக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய இறு­திச் சடங்கு நிலை­ய­மான இது, தென்­கி­ழக்­கா­சி­யா­வில் சூரிய சக்­தி­யில் இயங்­கும் முதல் இறு­திச் சடங்கு நிலை­ய­மும் ஆகும்.

இறு­திச் சடங்கு சேவை­க­ளுக்­கும் அவற்­றுக்­கான இடங்­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ரில் தேவை அதி­கம் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதற்­கான ஆயத்த நட­வ­டிக்­கை­களில் ஒன்றாக புதிய இறு­திச் சடங்கு நிலை­யம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

உட்­லண்ட்ஸ் மெமோ­ரி­யல் காம்­ப்பி­ளக்ஸ் என்­ற­ழைக்­கப்­படும் இந்­நி­லை­யம் உட்­லண்ட்ஸ் தொழிலியல் பூங்­கா­வில் அமைந்­துள்­ளது.

இந்­நி­லை­யத்­தில் 14 இறு­திச் சடங்கு மண்­ட­பங்­கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்­தும் எல்லா சம­யத்­தி­ன­ருக்­கும் பொருந்­தும்.

ஒவ்­வொரு மண்­ட­பத்­தி­லும் குறைந்­த­பட்­சம் 60 பேர் இருக்­க­லாம். மண்­ட­பங்­கள் இணைக்­கப்­ப­டும்­போது அவற்­றில் அதி­க­பட்­ச­மாக 1,000 பேர் இருக்­க­லாம்.

இந்­நி­லை­யம் 24 மணிநேரமும் செயல்படும். இதன் பரப்­பளவு 10,000 சதுர மீட்­டர்.

இங்­குள்ள சூரிய சக்­தித் தகடு­கள் 168,000 கிலோ­வாட் மணி­நேர எரி­சக்­தியை உற்­பத்தி செய்­யும். இதைக் கொண்டு ஓர் ஆண்­டில் 866 நான்­கறை வீவக வீடு­க­ளுக்கு மின்­சா­ரம் வழங்­க­லாம்.

நிலை­யத்­தின் மூன்று மாடிகளில் இறு­திச் சடங்­குக் கூடங்­கள் அமைந்­துள்­ளன. இரண்டு மாடிகளில் அஸ்தி மாடங்­கள் இருக்­கின்­றன.

மூன்று மாடிகளில் வாகன நிறுத்­து­மி­டங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கே 170க்கும் அதி­க­மான வாக­னங்­களை நிறுத்­தலாம்.

இவற்­றோடு, பூங்­கா­வில் அமைக்­கப்­படும் குளிர்­சா­தன வசதி கொண்ட அஸ்தி மாட­மும் இவ்­வாண்டு ஜூன் மாதத்­துக்­குள் இந்த வளாகத்தின் ஓர் அங்கமாக செயல்படும்.

சிங்­கப்­பூ­ரில் மூப்­ப­டை­யும் சமூ­கம் பெருகி வரு­வ­தால் வரும் ஆண்­டு­களில் மர­ண­ம­டை­வோரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படுகிறது. அதைக் கையாள அடுத்த 10 ஆண்­டு­களில் நான்கு இறு­திச் சடங்கு நிலை­யங்­க­ளை அமைக்க தேசிய சுற்­றுப்­புற வாரியம் திட்­ட­மிட்­டுள்­ளது.

அவற்­றில் முத­லா­வது உட்­லண்ட்ஸ் இறு­திச் சடங்கு நிலை­யம்.

2020ஆம் ஆண்­டில் மர­ண­மடைந்­தோ­ரின் எண்­ணிக்கை சுமார் 22,000. 2040ஆம் ஆண்டுக்­குள் அந்த எண்­ணிக்கை சுமார் 40,000க்கு உய­ரும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ள­தாக உட்­லண்ட்ஸ் இறு­திச் சடங்கு நிலை­யத்­தின் பொது மேலா­ளர் பென் ஹாவ் சுட்­டி­னார்.

"அன்­புக்­கு­ரி­ய­வரை இழந்­த­வர்களுக்கு உகந்த சூழலை உரு­வாக்­கும் வகை­யில் கட்­ட­டம் வடி­வமைக்­கப்­பட்­டுள்­ளது. பொது­வாக இறு­திச் சடங்கு நிலை­யங்­களில் உண­ரப்­ப­டு­வ­தா­கச் சொல்­லப்­படும் கவலை உணர்வு இல்­லாத வகை­யி­லும் வடி­வ­மைப்பு இடம்­பெற்­றுள்­ளது," என்று செய்­தி­யாளர்­க­ளுக்கு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் திரு ஹாவ் குறிப்­பிட்­டார். மாண்­டோ­ரின் குடும்­பத்­தார் உள்­ளிட்­டோ­ரின் வருத்­தத்­தை­யும் அச்­சத்­தையும் குறைக்­கும் நோக்­கு­டன் இறு­திச் சடங்கு மண்­ட­பங்­க­ளின் வெளிப்­பு­றங்­களில் மனத்­திற்கு இதமான தாவர வகை­கள் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக நிலை­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி ஜேசன் போ கூறி­னார்.

குடும்­பங்­க­ளுக்­கான ஓய்வு அறை­கள், குளி­ய­ல­றை­கள் போன்­ற­வை­யும் நிலையத்தில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.