முதியோருக்கான பல்மருத்துவ மையம்

முதியோருக்கான பல்மருத்துவ மையம்

2 mins read
9bbce761-d927-42ed-9579-8ab23c2c840b
-

பல்­ம­ருத்­து­வத்­துக்­கான தேசிய பல்­க­லைக்­க­ழக மையம், அலெக்­சாண்­டிரா மருத்­து­வ­

ம­னை­யில் அதன் முதல் துணை நிபு­ணத்­துவ மருந்­த­கத்தை அமைத்­துள்­ளது.

ஏற்­கெ­னவே நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்ள, நாட்­பட்ட நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள அல்­லது அறி­வாற்­றல் குறை­பாடு கொண்ட முதி­ய­வர்

­க­ளுக்கு ஏற்­படும் பற்­கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க இந்த மருந்­த­கம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மருந்­த­கத்­தைத் திறப்­ப­தன் மூலம் முதிய நோயா­ளி­க­ளுக்கு பற்­கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளைத் தடுக்­க­வும் அப்­ப­டியே பிரச்­சினை ஏற்­பட்­டால் அதற்­குத் தீர்வு காண­வும் முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பற்­கள் தொடர்­பான பிரச்­

சி­னை­க­ளுக்­குச் சிகிச்சை பெறு­வதை முதி­யோ­ருக்கு இந்த மருந்­த­கம் எளி­தாக்­கு­கிறது.

மருந்­த­கத்­தில் அறுவை சிகிச்சை இல்­லாத மற்ற அடிப்­படை பல்­ம­ருத்­துவ சிகிச்­சை­கள் முதி­யோ­ருக்கு அளிக்­கப்­படும்.

பற்­கள் சொத்­தை­யா­கா­மல் பேணிக் காப்­பது, சொத்­தை­யான பற்­க­ளை அகற்றுவது போன்ற சிகிச்­சை­கள் அளிக்­கப்­படும்.

பற்­கள், வாய்ப் பகு­தி­தொடர்பான நோய் ஏற்பட்டால் முதி­ய­வர்­க­ளுக்கு நீரி­ழிவு நோய், உயர் ரத்த அழுத்­தம், சுவா­சப் பிரச்­சினை போன்­றவை ஏற்­ப­டக்­கூ­டும், மோச­

ம­டை­யக்­கூ­டும் என்று அலெக்­சாண்­டிரா மருத்­து­வ­ம­னை­யின் தலைமை நிர்­வாகி ஜேசன் புவா தெரி­வித்­தார். புதிய மருந்­த­கம் ஏறத்­தாழ இரண்டு வீவக ஐந்­தறை வீடு­க­ளின் அள­வுக்கு இருக்­கிறது.

அதில் ஐந்து சிகிச்சை அறை­கள் உள்­ளன. சிகிச்சை அறை­கள் முதி­யோ­ருக்கு உகந்த பல்­ம­ருத்­துவ சாத­னங்­க­ளைக் கொண்­டுள்­ளன.

சக்­க­ர­ நாற்­காலி பயன்­ப­டுத்­தும் முதி­யோர், சக்­க­ர­ நாற்­கா­லி­

யி­லேயே அமர்ந்தவாறு

பல்­ம­ருத்­துவ சிகிச்சை பெற ஏது­வாக வச­தி­கள் உள்ளன.

மருந்­த­கத்­தில் உள்ள நிபு­ணத்­து­வப் பல்­ம­ருத்­து­வர்­கள் ஈறு­கள் தொடர்­பான நோய், பற்­கள் தொடர்­பான பிரச்­சி­னை­கள், செயற்­கைப் பற்­க­ளைப் பொருத்­து­வது போன்ற சிகிச்­சை­களை அளிப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த மாதம் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்ட இந்த மருந்­த­கத்­தில் தற்­போது வாரத்­துக்­குச் சரா­ச­ரி­யாக 80 பேர் சிகிச்சை

பெற்­று­க்கொள்­கின்­ற­னர்.

மருந்­த­கத்தை சுகா­தார அமைச்­சின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் திறந்­து­வைத்­தார்.