85,000 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

2 mins read
edd7c60a-0b1a-455e-8b4b-db7efbad797f
-

மண்­டாய் வட்­டா­ரக் கிடங்கு ஒன்­றி­லி­ருந்து 85,000க்கு மேற்­பட்ட மின்­சி­க­ரெட்­டு­க­ளை­யும் அவற்­றைப் பயன்­ப­டுத்­தத் தேவைப்­படும் கரு­வி­க­ளை­யும் அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

இது­வரை கைப்­பற்­றப்­பட்ட ஆக அதிக மின்­சி­க­ரெட்­டு­கள் அவை.

சென்ற மாதம் 29ஆம் தேதி நடந்த சோதனை நட­வ­டிக்­கை­யில் 20 வய­துக்­கும் 33 வய­துக்­கும் இடைப்­பட்ட ஐவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளனர் என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­தது.

மின்­சி­க­ரெட்­டு­கள் கடத்­த­லில் தொடர்­பு­டை­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஐவ­ரும் விசா­ர­ணை­யில் உதவி வரு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

சோதனை நட­வ­டிக்கை 72 மணி நேரத்­துக்­கு­மேல் நீடித்­த­தா­க­வும் சட்­ட­வி­ரோத மின்­சி­க­ரெட் விநி­யோ­கச் சங்­கிலி துண்­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் காவல்­து­றை­யும் ஆணை­ய­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட பொருள்­க­ளின் மதிப்பை அதி­காரி­கள் கணக்­கிட்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்கு முன்­னர் 2021ஆம் ஆண்டு பறி­மு­தல் செய்­யப்­பட்ட $2.2 மில்­லி­யன் மதிப்­பி­லான மின்­சி­க­ரெட்­டு­க­ளை­விட அதி­க­மான மின்­சி­க­ரெட்­டு­கள் மண்­டாய்க் கிடங்­கில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

சென்ற மாதம் 28ஆம் தேதி புளோக் 592, மாண்ட்­ரீல் லிங்க்­கில் உள்ள அடுக்கு மாடி கார் நிறுத்­து­மி­டத்­தில் இருந்து உத­வி­கேட்டு அழைப்பு வந்­த­தா­கக் காவல்­துறை குறிப்­பிட்­டது.

அதி­கா­ரி­கள் அங்கு சென்­ற­போது மின்­சி­க­ரெட்­டு­கள் அடங்­கிய பொட்­ட­லங்­களை வேன் ஓட்­டு­நர் ஒரு­வர் ஐந்து பேரி­டம் தரு­வ­தைக் கண்­ட­னர். அந்த ஐந்து பேரும் மின்­சி­க­ரெட்­டு­களை வாங்­கி­யோ­ரி­டம் அவற்றை விநி­யோ­கிப்­ப­வர்­கள் எனத் தெரிய­வந்­தது.

தடுத்து வைக்­கப்­பட்ட அவர்­களி­டம் விசா­ரணை நடத்­தி­ய­போது மண்­டாய் கிடங்கு குறித்­துத் தெரி­ய­வந்­தது.

அர­சாங்க ஊழி­யர் தன் கட­மையை ஆற்­று­வ­தைத் தடை செய்­த­தன் தொடர்­பில் 27 வயது வேன் ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டார். தங்­க­ளி­ட­மி­ருந்த இயந்­தி­ரங்­க­ளைக் கடு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தி­யது தொடர்­பில் அவ­ரும் 26 வயது ஆட­வர் ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கார் நிறுத்­து­மி­டத்­தில் காணப்­பட்ட மேலும் நான்கு இளை­யர்­களும் விசா­ர­ணை­யில் உதவி வரு­கின்­ற­னர்.

தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய புகை­யி­லைப் பொருள்­க­ளையோ அவற்­றுக்கு நிக­ரா­ன­வற்­றையோ இறக்­கு­மதி செய்­தல், விநி­யோ­கித்­தல், விற்­பனை செய்­தல், விற்க முய­லு­தல் ஆகி­யவை சட்ட­வி­ரோ­த­மா­க­கக் கரு­தப்­படும் என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் கூறி­யது.

குழா­யின் மூலம் புகைக்­கப்­படும் 'ஷிஷா' புகை­யிலை, புகை வெளி­வி­டாத புகை­யிலை, மெல்­லக்­கூ­டிய புகை­யிலை, மின்­சி­க­ரெட்­டு­கள், அவற்­றைப் பயன்­படுத்­து­வ­தற்­கான கரு­வி­கள் போன்­ற­வை­யும் இவற்­றில் அடங்­கும்.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால், முதல்­முறை குற்­றம் செய்­தோ­ருக்கு $10,000 வரை­யி­லான அப­ரா­தமோ ஆறு மாதம் வரை­யிலான சிறைத்­தண்­ட­னையோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம். மீண்­டும் குற்­றம் புரி­வோ­ருக்கு இரு மடங்கு தண்­டனை விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.