புதிய நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கும் லிஷா

3 mins read
db774caf-01e8-455b-862a-da74c8d76152
-

சித்­தி­ரைப் புத்­தாண்டு மற்­றும் இந்­திய கலா­சா­ரத் திரு­வி­ழாவை இம்­மா­தம் முழு­வ­தும் குதூ­க­லத்­து­டன் கொண்­டாட லிஷா எனும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­புடை­மைச் சங்­கம் பல நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

ஒள­வை­யாரை மைய­மாக வைத்­துக் கொண்­டா­டப்­படும் சித்­தி­ரைக் கலை விழா இம்­மா­தம் 16ஆம் தேதி பெர்ச் சாலை­யின் திறந்­த­வெ­ளி­யில் நடை­பெ­றும். ஒள­வை­யா­ரின் புக­ழை­யும் எழுத்­தை­யும் பாராட்­டும் இவ்­வி­ழா­விற்கு 1,000 பேர் வரை வருகை புரி­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த இல­வச நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரம் நடை­பெ­றும். சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம், சிங்­கப்­பூ­ரி­லுள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­தின் உயர் அதி­காரி ஒரு­வர் ஆகி­யோர் இந்த நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­னர்­க­ளா­கக் கலந்­து­கொள்­வர்.

தமிழ், பெங்­காலி, பஞ்­சாபி, இந்­திய முஸ்­லிம், மலை­யாளி உள்­ளிட்ட 15 இந்­திய சமூ­கங்­க­ளின் பாரம்­ப­ரிய நட­னங்­கள் வரும் 15 தேதி நடை­பெ­றும். இவ்­வி­ழா­வில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை துணை அமைச்­சர் ஆல்­வின் டான் கலந்­து­கொள்­வார்.

உணவை முன்­னி­லைப்­ப­டுத்தி கொண்­டாட 15 இந்­திய சமூ­கங்­கள் தொடர்­பான கண்­காட்சி பெர்ச் சாலை­யில், வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடை­பெ­றும். இங்கு அமைக்­கப்­படும் 16 உண­வுக்­கூ­டங்­களில் வெவ்­வேறு இந்­திய உணவு வகை­களை மக்­கள் ருசிக்­க­லாம்.

ஐந்து மர­பு­டை­மை­க­ளைப் பறை சாற்­றும் உண­வ­கங்­க­ளின் உணவு வகை­க­ளைச் சுவைத்து மேலும் தெரிந்­து­கொள்ள ஓர் உண­வுச் சுற்­றுலா 8, 15, 29ஆம் தேதி­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பிற்­ப­கல் 3 மணி­யி­லிருந்து மாலை 5 மணி வரை நடக்­கும் இந்த நிகழ்ச்­சி­யில் பங் கேற்க $10 கட்­ட­ணம்.

இதற்­கி­டையே, யோகா­ச­னம் செய்ய ஆர்­வம் இருப்­ப­வர்­கள் 8, 15ஆம் தேதி­களில் இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­திற்கு வெளியே நடக்­கும் யோகா பயிற்­சி­யில் கலந்­து­கொள்­ள­லாம். மாலை 5.30 மணிக்கு தொடங்­கும் இந்த ஒரு மணி­நேர இல­வ­சப் பயிற்­சிக்கு முன்­ப­திவு செய்ய வேண்­டும்.

மாண­வர்­க­ளைத் தமி­ழில் உரை­யாட ஊக்­கு­விக்க, பேச்­சுப் பயி­ல­ரங்கு ஒன்று 16ஆம் தேதி காலை 9 மணி­யி­லி­ருந்து நண்­ப­கல் வரை நடத்­தப்­படும். 50 பேர் மட்­டும் அனு­ம­திக்­கப்­படும் இந்­தப் பயி­ல­ரங்­கில் சேர­வும் முன்­ப­திவு அவ­சி­யம்.

இதில் பல்­வேறு இந்­தி­யக் கலா­சா­ரங்­க­ளைப் பற்றி மக்­க­ளி­டம் எடுத்து கூறும் வகை­யில் 'ஜாய் ஆஃப் ட்ர­டி­ஷன்' என்ற ஐந்து நாள் நிகழ்ச்சி 17ஆம் தேதி தொடங்­கும்.

பெர்ச் சாலை­யின் திறந்த வெளிக் கூடா­ரத்­தில் நடை­பெ­றும் இந்த இல­வச நிகழ்ச்­சி­யில் தமிழ் எழுத்­துக் கலை, ரங்­கோலி கலை, பங்க்ரா போன்ற நட­வ­டிக்­கை­களில் மக்­கள் ஈடு­ப­ட­லாம். இதில் பள்ளி மாண­வர்­களும் கலந்­து­கொள்ள ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளையும் கொண்­டாட்­டத்­தில் இணைத்துக் கொள்ள திருக்­கு­றள் எழு­தும் நிகழ்ச்சி இம்­மா­தம் 23ஆம் தேதி காலை 11 மணி­யி­லி­ருந்து நடை­பெ­ற­வுள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யத்­து­டன் சேர்ந்து நடத்­தும் இந்த விழா­வில் நூற்­றுக்­கும் அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கலந்­து­கொள்­வர். ஒரு மணி நேரத்­தில் ஆத்­தி­சூடி, திருக்­குறள்­களை எழுதி அவர்­க­ளின் வாழ்க்கை அனு­ப­வங்­க­ளோடு இணைக்க இந்த நிகழ்ச்சி ஊக்கு­விக்­கிறது.

ஒள­வை­யா­ரின் ஆத்­தி­சூடி பழ­மொ­ழி­களை மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூற 64 விளம்­ப­ரப் பதா­கை­கள் சிராங்­கூன் சாலை முழு­வ­தும் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்­வொரு பதா­கை­யி­லும் ஒள­வை­யா­ரின் பழ­மொழி தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் எழு­தப்­பட்­டி­ருக்­கும்.