10ல் 9 புது பட்டதாரிகளுக்கு ஆறே மாதங்களில் வேலை

10ல் 9 புது பட்டதாரிகளுக்கு ஆறே மாதங்களில் வேலை

2 mins read
b2bb5560-7736-4be6-90f7-69b5d5066d97
-

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் ஊதியமும் கூடியது

சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வமைப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் (எஸ்யுடிடி) சேர்ந்த புதிய பட்­ட­தாரி­களில் 10ல் ஒன்­பது பேருக்கு, இறு­தித் தேர்வை எழு­திய உட­னேயே ஆறே மாதங்­களில் வேலை கிடைத்­து­விட்­டது.

முழு­நே­ர­மாக வேலை­யில் சேர்ந்த அத்­த­கைய புதிய பட்ட தாரிக­ளின் மொத்த மாதாந்­திர சரா­சரி சம்­ப­ளம் 2021ல் $4,500 ஆக இருந்­தது. அது சென்ற ஆண்­டில் $4,800 ஆக அதி­கரித்­தது. அதே­வே­ளை­யில், அவர்­களின் மொத்த மாதாந்­திர சம்­ப­ளம் $4,730லிருந்து $5,102 ஆகக் கூடி இருக்­கிறது.

எஸ்யுடிடி பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆகப் புதிய பட்­ட­தா­ரி­கள் வேலை நிய­மன ஆய்வு மூலம் இந்த நில­வ­ரங்­கள் தெரி­ய­வந்து இருக்­கின்­றன.

அந்த ஆய்­வில் இந்­தப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் எட்­டா­வது பட்­ட­ம­ளிப்­பைச் சேர்ந்த 388 பட்­ட­தா­ரி­களில் 300 பேர் உள்­ள­டக்­கப்­பட்­ட­னர்.

பட்­ட­தா­ரி­களில் 55 விழுக்­காட்டுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் தக­வல் தொழில்­நுட்­பத் துறை, நிதி, காப்­பு­றுதி, அறி­வி­யல் ஆய்வு உரு­வாக்­கத் துறை­களில் முழு­நேர வேலை­யைப் பெற்­ற­னர்.

சிங்­கப்­பூர் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் படித்து பட்­டம் பெறும் புதிய பட்­ட­தா­ரி­களில் முன்­பை­விட அதி­க­மா­னோர் இப்­போது முழு­நேர வேலை­யை­யும் அதிக ஊதி­யத்­தை­யும் பெறு­கி­றார்­கள் என்­பது அண்­மைய ஆய்­வு­கள் மூலம் தெரி­ய­வ­ந்துள்ளன.

கொவிட்-19 தொற்­றில் இருந்து மீண்டு பொரு­ளி­யல் வளர்ச்­சி­யடை­யத் தொடங்­கியதே இதற்­கான கார­ணம்.

முழு­நேர வேலை பெற்ற புதிய பட்­ட­தா­ரி­களில் தக­வல், மின்­னி­லக்கத் தொழில்­நுட்­பங்­கள், உயிர் அறி­வி­யல், பொறி­யி­யல் ஆகி­யவை உள்­ளிட்ட பல துறை­களைச் சேர்ந்த பட்­ட­தா­ரி­களே முழு­நேர வேலை பெற்­ற­வர்­களில் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் உள்­ள­னர் என்பது குறிப்பிடத் தக்கது.

தக­வல், மின்­னி­லக்கத் தொழில்­நுட்­பம் பயின்­ற­வர்­களே தொடர்ந்து அதி­கம் சம்­ப­ளம் பெறு­கி­றார்­கள்.

இவர்­கள் 2021ல் வீட்­டுக்கு எடுத்­துச் சென்ற சம்­ப­ளம் $5,000. இது சென்ற ஆண்­டில் $5,625 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இந்த நில­வ­ரம் பற்றி கருத்து கூறிய இப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வர் சோங் டோவ் சோங், புதி­தாகப் பட்­டம் பெறு­வோரை முத­லா­ளி­கள் தேடி வேலை­யில் அமர்த்­து­கி­றார்­கள் என்­ப­தையே வேலை நிய­மன ஆய்வு முடி­வு­கள் காட்டு­வதா­கக் கூறி­னார்.

"எஸ்யுடிடி பல்­க­லைக்­க­ழ­கம் இளம் தலை­வர்­க­ளை­யும் புத்­தாக்க வல்­லு­நர்­க­ளை­யும் தொடர்ந்து பேணி உரு­வாக்­கும்.

"அவர்­கள் பல துறை­களை உள்­ள­டக்­கும் வடி­வ­மைப்­புக் கல்­வி­யைப் பெறு­வார்­கள்," என்று பேரா­சி­ரி­யர் சோங் மேலும் தெரி­வித்­தார்.