மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி இயக்­கம்: 712 தனியார் மருந்தகங்கள் இணைந்தன

மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி இயக்­கம்: 712 தனியார் மருந்தகங்கள் இணைந்தன

2 mins read
8dbbd178-935f-4d94-836f-ecbefddbee79
-

மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி இயக்­கத்­தில் தனி­யார் மருந்­தகங்­க­ளைச் சேர்க்க இம்­மா­தம் முயற்சி தொடங்­கி­யது. இது­வரை மொத்­தம் 712 தனி­யார் மருந்­த­கங்­கள் அந்த இயக்­கத்­தில் சேர்ந்து இருக்­கின்­றன என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 1,200 சமூக சுகா­தார உத­வித் திட்ட (சாஸ்) மருந்­த­கங்­கள் செயல்­ப­டு­கின்­றன என்­பதை சமூக ஊட­கப் பக்­கத்­தில் அவர் கோடி­காட்­டி­னார்.

அந்த இயக்­கத்­தில் இருப் போரில் ராஃபிள்ஸ் மருத்­து­வக் குழு­மம், ஹெல்த்வே மருத்­து­வக் குழு­மம் போன்ற பெரிய அமைப்பு­கள் எல்­லாம் உள்­ள­டங்­கும்.

அதே­போன்று, பெரிய அள விலான தொடக்க பரா­ம­ரிப்­புச் சேவைக் கட்­ட­மைப்­பில் உள்ள மருந்­த­கங்­களில் பெரும்­பாலா­னவை அவ்வியக்­கத்­தில் சேர்ந்து இருக்­கின்­றன என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அந்த இயக்­கம், முத­லில் குறைந்­த­பட்­சம் 60 வயதை எட்­டி­ய­வர்­க­ளு­டன் ஜூலை­யில் தொடங்­கு­கிறது.

குடும்ப மருத்­து­வர் ஒரு­வரை அமர்த்­திக் கொள்­ளும்­படி குடி­யிருப்­பா­ளர்­க­ளுக்கு அந்த இயக்­கம் ஊக்­க­மூட்­டும். அந்த இயக்­கத்­தின்­கீழ் மக்­கள் ஆண்­டு­தோ­றும் இல­வச உடல் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம்.

தேசிய அள­வில் பரிந்­துரைக்­கப்­படும் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­ள­லாம். சுகா­தார பரி­சோ­த­னை­க­ளை­யும் செய்­து­கொள்­ள­லாம்.

இயக்­கத்­தின் குறிக்­கோள்­கள் நிறை­வேற வேண்­டு­மா­னால் தனி­யார் மருத்­து­வர்­கள் மிக முக்­கி­ய­மா­ன­வர்­கள் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

இயக்­கத்­தில் தனி­யார் மருத்­து­வர்­கள் சேர்­வ­தற்கு அதி­கா­ரி­கள் ஆத­ரவு அளிக்­கி­றார்­கள்.

தக­வல் தொழில்­நுட்ப மேம்­பா­டு­க­ளுக்கு மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. தனி­யார் மருத்­து­வர்­களை இயக்­கத்­தில் சேர்க்­கும் ஒவ்­வொரு குடி­யி­ருப்­பா­ள­ருக்­கும் வரு­டாந்­திர சேவைக் கட்­ட­ணத்தை மருத்­து­வர்­கள் பெறு­வார்­கள். இதர பல நன்­மை­க­ளுக்­கும் தனி­யார் மருத்­து­வர்­க­ளுக்­குக் கிடைக்­கும்.

மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி இயக்­கத்­திற்கு ஆத­ரவு அளிக்­கும் தனி­யார் மருத்­து­வர்­க­ளுக்கு திரு ஓங் நன்றி கூறி­னார். அந்த இயக்­கம் கார­ண­மாக ஒட்­டு­மொத்த சுகா­தார நில­வ­ரங்­கள் அடிப்­ப­டை­யில் மாற்­றம் காணும் என்று அவர் கூறி­னார்.

தனி­யார் மருத்­து­வர்­கள், தொடக்­கப் பரா­ம­ரிப்­புச் சேவை­யா­ளர்­க­ளின் பணி முக்­கி­யத்­து­வம் பெறும். ஜூலைக்­குள் மேலும் பல தனி­யார் மருத்­து­வர்­கள் இந்த இயக்­கத்­தில் சேர்­வர் என அமைச்­சர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.