இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களை அதிகாரிகள் முறையாக சோதனையிட்டு சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யாத ஒரு நிறுவனத்துக்கு நேற்று 28,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு இறக்குமதியாளரான ஓர்கா மார்க்கெட்டிங் ஜனவரி, ஜூன் மாதங்களில் ஆடு, மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்தது.
இரண்டு சம்பவங்களில் அது பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
இதற்காக ஓர்கா நிறுவனத்துக்கு 15,000 வெள்ளியும் அதன் இயக்குநர் கிறிஸ்டஃபர் ஜான் மோருக்கு 13,000 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படும் மீன், இறைச்சியை விற்பனை செய்வதற்கு முன்பு முறையாகச் சோதனையிட்டு சான்றிதழ் பெறுவது அவசியம் என்று அமைப்பு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

