தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போக்குவரத்து நெரிசல்; ஜோகூர் செல்ல பல மணி நேரம் தாமதம்

1 mins read
18aed3b4-3443-427b-961d-da0025145bf1
-

புனி­த­வெள்­ளி­யான இன்­று­மு­தல் நீண்ட வார­வி­டு­முறை வரு­வ­தால் மலே­சியா செல்­லக்­கூ­டிய வாக­ன­மோட்­டி­கள் நேற்று போக்­கு­வ­ரத்து நெரி­ச­லில் சிர­மப்­பட்­ட­னர். அத­னால் அவர்­க­ளின் பய­ணத்­தில் தாம­தம் ஏற்­பட்­டது.

ஜோகூ­ருக்­கு இட்டு செல்லும் சிங்­கப்­பூ­ரின் இரு சோத­னைச் சாவ­டி­க­ளி­லும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்பட்டது. துவாஸ் மற்­றும் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­களில் கடு­மை­யான போக்­கு­வ­ரத்து நெரி­சல் இருப்­பதை நேற்று பிற்­ப­கல் 3.45 மணி­ய­ள­வில் 'ஒன்­மோட்­டோ­ரிங்' இணை­யத்­த­ளத்­தின் நேரடி ஒளி­ப­ரப்­பில் காண­மு­டிந்­தது.

கடற்­பா­லம் வழி­யாக ஜோகூர் செல்­லக்­கூ­டிய பய­ணி­கள் நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை­யி­லான தாம­தத்தை எதிர்­நோக்­க­லாம் என்று 'பீட் த ஜேம்' என்­னும் கைப்­பேசி செயலி காட்­டி­யது.

துவா­ஸில், போக்­கு­வ­ரத்து நெருக்­கடி மூன்று மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை­இருக்­க­லாம் என்­றும் கணிக்­கப்­பட்­டது.

இன்­றைய புனி­த­வெள்ளி பொது­வி­டு­மு­றை­யோடு ஏப்­ரல் 5ஆம் தேதி தொடங்­கிய pfங் மிங் திரு­வி­ழா­வும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்­கான கார­ண­மாக இருக்­க­லாம்.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரின் சோத­னைச் சாவடி ஆணை­யம் ஓர் ஆலோ­ச­னைக் குறிப்பை வெளி­யிட்­டது. தாம­தம் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் பய­ணி­கள் தங்­க­ளது பய­ணத்­தைத் தொடங்­கும் முன்­னர் போக்­கு­வ­ரத்து நில­வ­ரத்­தைக் கவ­னத்­தில் கொள்­ள­வும்," என்று அந்­தக் குறிப்பு கூறி­யது.

முன்­ன­தாக, இரு சோத­னைச்­சா­வ­டி­க­ளி­லும் கடு­மை­யான நெரி­சல் இருப்­ப­தாக முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் ஆணை­யம் தனது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தி­ருந்­தது.