தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு; சில பயணிகள் பேருந்துகளில் ஏறி பயணம்

2 mins read
db72acd5-b281-446a-a076-2f52703bfb58
-

சமிக்ஞை முறை­யில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக நேற்று வட்­டப்­பாதை எம்­ஆர்டி ரயில் சேவை இரண்டு மணி நேரத்­துக்கு மேல் பாதிக்­கப்­பட்­டது. ரயில்­கள் தாம­த­மாக வந்­த­தால் பய­ணி­கள் பேருந்­து­களில் ஏறி பய­ணத்­தைத் தொடர்ந்­த­னர்.

இவ்­வாண்­டில் முதல் முறை­யாக நிகழ்ந்த இந்த சேவைத் தடை­யில் ஒரு கட்­டத்­தில் நாற்­பது நிமி­டத்­திற்கு மேல் ரயில் தாம­த­மா­ன­தால் பய­ணி­கள் திக்கு முக்­கா­டி­னர். டோபி­காட்/மரினா பே நிலை­யத்­துக்­கும் பாய லேபார் எம்­ஆர்டி நிலை­யத்­துக்­கும் இடையே ரயில்­கள் வந்து சேர்­வ­தில் பெரும் தாம­தம் ஏற்­பட்­டது.

இந்த நிலை­யில் பய­ணத்­துக்கு கூடு­தல் நேரத்தை ஒதுக்­கும்­படி பய­ணி­களை ரயில்வே நிறு­வ­ன­மான எஸ்­எம்­ஆர்டி பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் டுவிட்­டர் பதி­வில் கேட்­டுக்கொண்­டது.

பய­ணி­க­ளுக்கு ஏற்­பட்ட இடை­யூ­று­க­ளைக் குறைப்­ப­தற்­காக அந்­நி­று­வ­னம் பாதிக்­கப்­பட்ட எம்­ஆர்டி நிலை­யங்­க­ளுக்கு இடையே சிறப்பு இல­வ­சப் பேருந்து சேவை­களை வழங்­கி­யது. பய­ணி­கள் மாற்று ரயில் தடம் வழி­யா­கச் செல்­ல­வும் அது அறி­வு­றுத்­தி­யது. பய­ணி­கள் பேருந்­தில் ஏறிச் செல்­வ­தற்­காக பல ஊழி­யர்­கள் வழி­காட்டி உதவி செய்­த­னர்.

பிற்­ப­கல் 2.50 மணி­ய­ள­வில் டோபி­காட்/மரினா பே நிலை­யங்­க­ளுக்கு இடையே இடை­யூறு குறைந்­த­தாக எஸ்­எம்­ஆர்டி அறி­வித்­தது. ரயில் சேவை வழக்க நிலைக்­குத் திரும்­பி­ய­தும் 3.15 மணியள­வில் இல­வ­சப் பேருந்து சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன.

ரயில் சேவை பாதிப்­பில் சிக்­கிக்கொண்­ட­வர்­களில் பீஷா­னி­லி­ருந்து புரோ­ம­னேட் சென்ற நடாஷா இர்­ஷாத்­தும் ஒரு­வர்.

"இன்று பொது விடு­மு­றை­யாக இருந்­த­தால் மக்­கள் அவ ­ச­ரப்­ப­ட­வில்லை என நினைக்­கி­றேன். வேலை நாளாக இருந்­தால் பய­ணி­கள் நிலை­கு­லைந்து போயி­ருப்­பார்­கள்," என்று அவர் கூறி­னார்.

எஸ்­எம்­ஆர்டி பின்­னர் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில், இந்­தச் சம்­ப­வம் முழு­வ­தும் ரயில்­கள் இயங்­கின.

"ஆனால் ரயில்­கள் மெது­வா­கச் சென்­ற­தால் நீண்ட நேர­மா­கி­யது," என்று தெரி­வித்­தது. பயணி­க­ளி­டம் அது மன்­னிப்­பும் கேட்­டுக்கொண்­டது.