சிங்கப்பூர் தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள்

சிங்கப்பூர் தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள்

2 mins read
ce2f6315-9ebf-45e5-9cf5-6a9aa925e9fb
-

மோன­லிசா

புனித வெள்­ளி­யான நேற்று, இயேசு கிறிஸ்து சிலு­வை­யில் அறை­யப்­பட்டு உயிர் நீத்­ததை சிங்­கப்­பூர் கிறிஸ்­து­வர்­கள் தேவா­ல­யங்­களில் ஒன்­று­கூடி தங்­க­ளு­டைய பாவங்­க­ளுக்­கான நிவர்த்­தி­யை­யும் பெற்­று­கொண்ட மன்­னிப்­பை­யும் அனு­ச­ரித்­த­னர்.

கொவிட் கட்­டுப்­பா­டு­கள் முழு­வ­தும் தளர்ந்­துள்ள சூழ­லில் இவ்­வாண்­டின் புனித வெள்ளி வழி­பாட்டு முறை­கள் வழக்க நிலை­யில் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

"காலை 10.30 மணிக்கு தொடங்­கிய தமிழ் ஆரா­த­னை­யில் 'முடிந்­தது' எனும் தலைப்­பி­லான பிர­சங்­கம் நடை­பெற்­றது. இவ்­வாண்டு மக்­க­ளுக்கு ஆழ்ந்த புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் வச­னங்­கள் மிக­வும் மெது­வாக வாசிக்­கப்­பட்­டன," என்று கூறி­னார் ஈசூன் கிறிஸ்­துவ தேவா­ல­யத்­தின் குரு­வா­ன­அருட்­திரு இஸ்­ர­வேல் செல்­ வம், 49.

"இயேசு தன்­னு­டைய தாழ்­மையை வெளிப்­ப­டுத்த சீடர்­க­ளின் பாதங்­களை கழு­வி­யதை நினை­வு­கூ­ரும் வித­மாக தேவா­ல­யங்­களில் குரு­வா­ன­வர்­கள் மக்­க­ளின் பாதங்­களை கழு­வும் வழி­பாட்டு அங்­கம் கொவிட் காலங்­க­ளுக்கு பின் இவ்­வாண்டு மீண்­டும் தொடங்­கி­யது," என்று கூறி­னார் ஜாலான் காயு வட்­டா­ரத்­தில் உள்ள பிர­சன்ன தேவா­ல­யத்­தின் தலைமை குரு­வா­ன­வர் (பொறுப்பு) அருட்­திரு எடி­சன் நேச­கு­மார் வில்­சன், 60.

"மக்­கள் வழி­பாட்டு ஆரா­த­னை­களில் மன­நி­றை­வு­டன் பங்­கு­ கொண்­ட­னர்," என்று ஷார்ட் ஸ்தி­ரீட் தமிழ் மெத்­த­டிஸ்ட் தேவா­ல­யத்­தின் குரு­வா­ன­ அருட்­திரு ஜேம்ஸ் நகு­லன் கூறி­னார்.

இத­னை­யொட்டி பிள்­ளை களுக்கான பல்­வேறு கலை நிகழ்ச்­சி­களும், விளை­யாட்­டு­களும், பொழு­போக்கு அங்­கங்­களும் சனிக்­கி­ழ­மை­யன்று (இன்று) மதி­யம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேவா­ல­யத்­தின் சமூக மன்­றத்­தில் நடை­பெ­ற­வுள்­ளன என்­றும் இவர் தெரி­வித்­தார்.

இவ்­வாண்டு குடும்ப உறுப்­பி­னர்­கள், நண்­பர்­கள், உற­வி­னர்­கள் என அனை­வ­ரும் ஒன்­றாக கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டது நம்­பிக்­கை­யை­யும் புத்­து­ணர்­வை­யும் அளித்­தது" என்று கூறி­னார் பூன் லே பகு­தி­யில் உள்ள புனித பிரான்­சிஸ் அசிசி தேவா­ல­யத்­தின் தொண்­டூ­ழி­ய­ரான பென்சி கலா, 47.

புனித வெள்ளி அன்று இயே­சு­வின் மர­ணத்­திற்­குப் பிறகு மூன்­றாம் நாளான ஈஸ்­டர் ஞாயி­ரின்­போது அவ­ரின் உயிர்த்­தெழு­த­லைக் கிறிஸ்துவர்­கள் கொண்­டா­டு­வார்­கள்.