தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படிக்கட்டில் விழுந்தவர் ஒரு வாரம் கழித்து மரணம்

1 mins read
b88f06a0-cc63-4a1a-b118-67ce4bc692dd
-

ஆர்ச்­சர்ட் ரோட்­டில் இருக்­கும் கன்­கார்ட் ஷாப்­பிங் மால் கட்­ட­டத்­திற்கு வெளியே உள்ள படிக்­கட்­டில், மார்ச் 26ஆம் தேதி முகம்­மது அஸ்­ஃப்ரே அப்­துல் காஹா, 27, என்­ப­வர், திரு தேவேந்­தி­ரன் சண்­மு­கம், 34, என்­ப­வ­ரைப் பிடித்­துத் தள்­ளி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

திரு தேவேந்­தி­ரன் பின்­பக்க­மாக விழுந்­த­தால் அவ­ரின் கபா­லத்­தில் பல எலும்­பு­கள் முறிந்­து­விட்­டன. அந்த ஆட­வர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

ஒரு வாரம் கழித்து கடந்த புதன்­கி­ழமை திரு தேவேந்­தி­ரன் மர­ண­ம­டைந்­து­விட்­டார். அவ­ரின் நல்­லு­டல் வெள்­ளிக்­கி­ழமை மண்­டாய் தக­னச் சாலை­யில் தக­னம் செய்­யப்­பட்­டது.

வேண்­டு­மென்றே கடு­மை­யான காயம் விளை­வித்­த­தாக அஸ்­ஃப்ரே மீது, சம்­ப­வம் நிகழ்ந்­த­தற்கு அடுத்த நாளன்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது. குற்­ற­வாளி என்று தீர்ப்­பா­னால் அஸ்­ஃப்­ரே­வுக்கு 10 ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, பிரம்­படி, அல்­லது அப­ரா­தம் விதிக்க முடி­யும்.

அஸ்­ஃப்ரே இதர குற்­றச்­செயல்­க­ளுக்­காக சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வந்­தார். தண்­டனை முடி­வ­தற்கு முன்­ன­தா­கவே தண்­டனை குறைப்பு உத்­த­ர­வின்­பே­ரில் அவர் வெளியே விடப்­பட்டு இருந்­தார்.

அப்­போது அவர் இந்­தக் குற்றத்­தைச் செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

விடுதலையாகாத நிலையில் இருந்தபோது குற்றத்தைச் செய்து இருக்கிறார் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் அஸ்­ஃப்ரே கூடுதலாக 178 நாள்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.