உலகின் 9வது சுறுசுறுப்பான விமான நிலையமாக சாங்கி

உலகின் 9வது சுறுசுறுப்பான விமான நிலையமாக சாங்கி

2 mins read
10d5c562-d079-40cf-be66-9783cb0fd3ad
-

2022ல் மொத்தம் 31.9 மில்லியன் அனைத்துலகப் பயணிகள் கடந்து சென்றனர்

சாங்கி விமான நிலை­யம், அனைத்­து­லக பய­ணி­கள் போக்கு ­வ­ரத்­தைப் பொறுத்­த­வரை சென்ற ஆண்­டில் உல­கின் ஆக சுறு­சு­றுப்­பு­மிக்க 10 விமான நிலை­யங்­களில் ஒன்­றாக மீண்­டும் இடம்­பெற்று இருக்­கிறது.

சாங்கி நிலை­யம் ஒன்­ப­தா­வது ஆக சுறு­சு­றுப்­பு­மிக்க நிலை­ய­மாக திகழ்­கிறது என்று அனைத்­து­லக விமான நிலைய உலக மன்­றம் என்ற அமைப்பு வரி­சைப்­ப­டுத்தி இருக்­கிறது.

சாங்கி நிலையத்தை சென்ற ஆண்­டில் மொத்­தம் 31.9 மில்­லி­யன் பய­ணி­கள் கடந்து சென்ற னர். அனைத்­து­லக விமான நிலைய உலக மன்­றம் பட்­டி­ய­லில் இடம்­பி­டித்து இருக்­கும் ஒரே ஆசிய விமான நிலை­யம் சாங்­கி­தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்­டி­ய­லில் துபாய் அனைத்­து­லக விமான நிலை­யம் 66 மில்­லி­யன் உல­கப் பய­ணி­க­ளு­டன் முத­லி­டத்­தில் இருக்­கிறது.

லண்­டன் ஹீத்ரோ (58.2 மில்­லி­யன் பய­ணி­கள்), ஆம்ஸ்டர்டாம் (52.5 மில்­லி­யன் பய­ணி­கள்) ஆகி­யவை அடுத்­த­டுத்த இடத்­தில் இருக்­கின்­றன.

கொவிட்-19க்கு முன்­ன­தாக அனைத்­து­லகப் பய­ணி­கள் போக்கு­வ­ரத்தைப் பொறுத்­தவரை உல­கின் ஏழா­வது ஆக சுறு­சுறுப்பு­மிக்க விமான நிலை­ய­மாக சாங்கி இருந்­தது. 2019ல் சாதனை அளவாக அது 68.3 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையாண்­டது.

கொவிட்-19 கார­ண­மாக எல்லை­கள் மூடப்­பட்­ட­தால் 2021ல் சாங்கி 95வது இடத்­திற்­குத் தள்­ளப்­பட்­டது.

அனைத்­து­லகப் பய­ணம் மீண்டும் சூடு­பி­டிக்­கத் தொடங்கி இருக்­கிறது. சென்ற ஆண்டில் உலகப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 7 பில்­லி­ய­னாக அதி­க­ரித்து இருக்­கிறது என்­பது இந்த உலக மன்­றத்­தின் முதல் கட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­ வ­ரு­கிறது.

இதை 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பிட்டுப் பார்க்­கை­யில், 53.5 விழுக்­காடு பய­ணி­கள் போக்கு­வரத்து அதி­க­ரித்து இருப்­பது தெரி­ய­வ­ரு­கிறது.

அனைத்­து­லகப் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து கொஞ்­சம் கொஞ்­ச­மாக கொவிட்-19க்கு முந்­தைய நிலையை எட்டி வரு­கிறது. சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து 89.7 விழுக்­காட்டு அள­வுக்­குத் திரும்பி­விட்­டது என்று அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கம் ஏப்­ரல் 4ஆம் தேதி வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன.

சாங்­கி­யில் இப்­போது பயணி­களின் போக்­கு­வ­ரத்து அளவு, விமா­னச் சேவை­கள், நகர தொடர்­பு­கள் எல்­லாம் கொவிட்-19க்கு முந்­தைய நிலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் கிட்­டத்­தட்ட 80% அள­வுக்குத் திரும்பி இருக்­கின்­றன என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் சென்ற மாதம் தெரி­வித்­தார்.

சாங்கி பய­ணி­கள் போக்­கு­வரத்து, கொரோ­னா­வுக்கு முந்­தைய நிலையை 2024ல் அல்­லது அதற்கு முன்­ன­தா­கவே எட்­டி­விடும் என்­றும் அவர் நம்­பிக்­கை தெரி­வித்­தார்.