மருத்துவ வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்

2 mins read
98a5d16a-0e60-4c2d-9e69-d9f1b2e62894
-

தமது அமைச்சின் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங்

துல்­லிய மருத்­து­வம், செயற்கை நுண்­ண­றிவு போன்ற மருத்­துவ அறி­வி­ய­லில் தொழில்­நுட்ப மேம்­பா­டு­க­ளுக்கு சிங்­கப்­பூர் ஆத­ர­வ­ளித்து, அவற்றை அர­வ­ணைக்க வேண்­டும். ஆனால், அவற்­றின் இடர்­க­ளை­யும் ஆபத்­து­க­ளை­யும் பற்றி அறிந்­தி­ருக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்­ளார்.

மருத்­துவ அறி­வி­ய­லில் பெரிய அள­வி­லான மேம்­பாட்­டிற்­கான கால­கட்­டம் இது என்­றார் அவர். அதே­வே­ளை­யில், சோதனை முறை சார்ந்த சிகிச்­சை­கள் பெரு­கும் நிலை ஏற்­ப­ட­லாம் என்று திரு ஓங் சொன்­னார்.

சோதனை முறை சார்ந்த சிகிச்­சை­கள் சிறு­பான்­மை­யி­ன­ரி­டம் மட்­டும் வேலை செய்­யும். எனவே, புதிய சிகிச்­சை­க­ளைப் பெரிய அள­வில் செயல்­ப­டுத்­து­வது, ஆதார அடிப்­ப­டை­யி­லான மருத்­துவ மேம்­பாட்­டை­யும் மருத்­துவ ஆக்­க­க­ரத்­தை­யும் செலவு மதிப்­பீட்­டை­யும் பொறுத்து உள்­ளது என்று அவர் விவ­ரித்­தார்.

14வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டாம் தவ­ணை­யின் தொடக்­கத்­தைக் குறிக்­கும் அதி­ப­ரின் உரை­யைத் தொடர்ந்து, தமது அமைச்­சின் பிற்­சேர்க்­கை­யில், திட்­டங்­களை திரு ஓங் கோடிட்­டுக் காட்­டி­னார்.

மருத்­து­வத் தொழில்­நுட்­பம் நிலை­நாட்­டப்­பட்­டா­லும், அது விலை­யு­யர்ந்­த­தாக இருப்­ப­தோடு குறிப்­பிட்ட சூழ்­நி­லை­களில் மட்­டுமே அது பயன்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

"அதன் பொருட்டு, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்கு நிதி வழங்­கு­வது தொடர்­பி­லான கொள்­கை­கள் குறித்து மறு­சிந்­தனை செய்ய வேண்­டி­யி­ருக்­கும். குறிப்­பாக, மருத்­து­வக் காப்­பு­றுதி, மெடி­ஷீல்ட் லைஃப் போன்­ற­வற்­றின் பங்கு பற்றி மறு­ப­ரி­சீ­லனை தேவை," என்று அவர் கூறி­னார்.

துல்­லிய மருத்­து­வம் போன்ற புதிய மருத்­து­வத் தொழில்­நுட்­பத்­தின் செயல்­பாட்­டில் அற­நெறித் தர­நி­லை­க­ளைப் பாது­காக்க புதிய விதி­முறை தேவைப்­ப­ட­லாம் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

இந்­தத் தீர்­வு­க­ளால் ஏற்­படும் பலன்­க­ளைப் பெற, ஆய்­வா­ளர்­கள், மருத்­து­வர்­கள், பொரு­ளி­யல் நிபு­ணர்­கள், ஒழுங்­கு­முறை அமைப்­பு­கள், பொது­மக்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரு­டன் பங்­கா­ளித்­துவ முயற்­சி­யில் சுகா­தார அமைச்­சும் ஈடு­படும் என்­றார் திரு ஓங்.

மக்­கள் ஆரோக்­கி­ய­மா­க வாழ்வ­தும் திரு ஓங்­கின் அமைச்­சின் திட்­டங்­களில் ஒரு முக்­கிய அம்­ச­மா­கும். நோய் வரு­முன் காக்­கும் பரா­ம­ரிப்­பின் மூலம் சிங்­கப்­பூர் மக்­க­ளின் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தில் வரும் ஆண்டு­களில் கவ­னம் செலுத்­தப்­படும்.

கரு­வுற்­றி­ருக்­கும்­போதே கர்ப்­பி­ணி­க­ளை­யும் அவர்­க­ளின் வாழ்க்கைத் துணைகளையும் இலக்­கா­கக் கொண்டு சுகா­தார முயற்­சி­களை முன்­னெ­டுப்­பது, பள்­ளி­களில் சுகா­தா­ரக் கல்­வி­யைச் சேர்க்க பிற அமைச்­சு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­று­வது, 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டம் மூலம் பெரி­யவர்­கள் தங்­கள் சுகா­தா­ரத்­தைப் பேண ஊக்­கு­விப்­பது உள்­ளிட்டவை அந்த முயற்­சி­களில் அடங்­கும்.

இவ்­வாறு செய்­வ­தால் பெரி­ய­வர்­க­ளுக்கு வயது ஏறும்­போது, சமூ­கத்­தில் அவர்­க­ளால் நல்ல வகை­யில் மூப்­ப­டைய முடி­யும்.

அந்­தி­ம­கா­லப் பரா­ம­ரிப்­புக்­கான ஆத­ர­வும் வலுப்­ப­டுத்­தப்­படும் என்று திரு ஓங் சொன்­னார். தங்­கள் வீடு­க­ளி­லேயே இறக்க விரும்­பும் பெரும்­பா­லா­னோ­ரின் விருப்­பங்­களை நிறை­வேற்ற முயற்சி மேற்­கொள்­ளப்­படும்.

எங்கு பரா­ம­ரிப்பு நாடப்­பட்­டா­லும் அதற்­கான ஆத­ரவு இருப்­பது உறு­தி­செய்­யப்­பட வேண்­டும் என்று திரு ஓங் கூறி­னார்.