ஸ்டாம்ஃபர்ட் ரோட்டில் கோடரியுடன் வந்த ஆடவர் கைது

ஸ்டாம்ஃபர்ட் ரோட்டில் கோடரியுடன் வந்த ஆடவர் கைது

1 mins read
e7ac4ed3-a233-4ac2-ab5a-b72de5d09e07
-

கோட­ரி­யு­டன் வந்த ஒரு­வர் கைதா­னார். ஸ்டாம்­ஃபர்ட் ரோட்­டில் நடந்த கைக­லப்பை அடுத்து அவர் பிடி­பட்­டார்.

அந்த ஆட­வர் ஸ்டாம்­ஃபர்ட் ரோடு, விக்­டோ­ரியா ரோடு சந்­திப்­பில் ராஃபிள்ஸ் சிட்­டியை நோக்கி சாலை­யைக் கடந்து சென்­றதை யூடி­யூப்­பில் பதி­வேற்­றப்­பட்ட ஒரு காணொளி காட்­டி­யது.

வலது கையில் கோட­ரி­யு­டன் அந்த நபர், அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்த காவல்­துறை வாக­னம் ஒன்றை நோக்கி நடந்து சென்­றார்.

சீரு­டை­யில் இருந்த இரண்டு அதி­கா­ரி­கள், தங்­கள் ஆயு­தங்­களை எடுத்து அந்த ஆட­வரை நோக்கிக் காட்­டி­னர்.

அதி­கா­ரி­களை நெருங்கி வந்த அந்த ஆட­வர், அவர்­களுக்கு கொஞ்ச தூரம் முன்­ன­தாக நின்று தன்­னு­டைய கோட­ரியைத் தூக்கி எறிந்­து­விட்­டார்.

அந்த 25 வயது ஆட­வர் தொடர்ந்து கைதா­ன­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

கோட­ரி­யும் கைப்­பற்­றப்­பட்­டது.

இதற்­கி­டையே, ஒரு கைகலப்பை அடுத்து 71 வயது ஆட­வர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­க­வும் 29 வயது ஆட­வர் புலன்­வி­சா­ர­ரணை­யில் உதவி வரு­வ­தா­க­வும் காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.